Page 6 of 6
“ஐ லவ் யூ டி” என்றான்.
அவன் கொழு கொழு கன்னங்களைக் கிள்ளியபடி
“ஐ லவ் யூ டா” என்று சிரித்தாள் ஹேமா. வெளியே பக்கத்து வீட்டு அக்காவிடம் தன் மாமியார் தன்னைப் பற்றி, “அவ எங்கேங்க சும்மா இருக்கா? கம்மல் பண்ணறேன், கொலுசு பண்ணறேன்னு ராத்திரியெல்லாம் வேலை செய்யுறா. அதான் நான் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கேன்” எனக்கூறுவதைக் கேட்டு தம்பதியர் இருவரும் சிரித்துக் கொண்டனர். அங்கே உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்தல் என்னும் அழகான பாடத்தைக் குழந்தைகள் கற்றுக் கொண்டனர்.