(Reading time: 18 - 35 minutes)

நிறைந்தவர்.

 அவருடைய மதிப்பீட்டில், அந்த பங்களாவை யோசிக்காமல் நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கலாம்.

 சதானந்தம் மனதுக்குள் கணக்குப் போட்டார். வெளிநாட்டில் இருக்கும் பங்களா சொந்தக்காரன், என்ன விலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பதால், சுலபமாக ஒரு கோடிக்கு விற்க அவரை சம்மதிக்க வைத்துவிடலாம்.

 வாங்குபவரின் காதில் இந்த பேய் கத்தும் வதந்தி விழாமல் இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நான்கு கோடி ரூபாய் அவரிடமிருந்து கறந்துவிடலாம்.

 லாபம் தனக்கு மட்டுமே கிடைப்பதற்கு தன்னிடம் ஒரு கோடி ரூபாய் இல்லையே என்று மனம் உறுத்தியதும், அடுத்த கட்ட யோசனைக்கு தாவினார்.

 பெரிய வியாபாரி எவரிடமாவது சாதுரியமாகப் பேசி, அவருக்கு இந்த பேரத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் லாபத்தை விளக்கி, சம்மதிக்கவைத்தால், அவர் தனக்கு தயக்கமின்றி ஒரு கோடி ரூபாய் தருவார் என்று நினைத்ததுமே, அவர் உடல் சிலிர்த்தது!

 தன் வீடு திரும்பி, இந்த திட்டத்தை தன் மனைவியிடம் தெரிவித்தார்.

 அவளோ, சதானந்தத்தைவிட பேராசைக்காரி!

 " ஏங்க! முட்டாள்தனமா, மூணுகோடி ரூபாய் லாபமும் நமக்கே கிடைக்கிற சந்தர்ப்பத்தை வேற எவனுக்கோ தாரை வார்க்கறீங்க? முதல்லே, அந்த ஒரு கோடி ரூபாயை நம்மால் புரட்ட முயற்சிப்போம்."

 சதானந்தம் தாவி அவளை கட்டியணைத்து முத்தமிட்டான்.

 " காரியத்தை வெற்றிகரமாக முடித்ததும் எல்லாத்தையும் சேர்த்து வைத்து கொண்டாடுவோம், இப்ப யோசிப்போம், தனித்தனியா!"

 இருவரும் தீவிர சிந்தனையில் இறங்கியபோது, அந்த 'பேய் பங்களாவில்' நடப்பதை கவனிப்போமா?

 வாட்ச்மென் கந்தசாமி தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

 " வள்ளி! பேய் சமாசாரத்தை இன்னிக்கு எத்தனை பேரிடம் பரப்பியிருக்கே? ஏஜெண்ட் ஐயா நேற்றைக்கு என்னை நேரிலே வந்து பார்த்து, யார் யாரோ பங்களாவை விலை பேச வராங்க; அவங்களிடம் நான் நேரிடையா பேய் பிசாசை நடமாட்டத்தைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது, பேசினால் அது வெளிநாட்டிலே இருக்கிற ஓனர் காதிலே விழுந்துடும், என்னை விலக்கிட்டு வேற யாராவது ஏஜெண்ட்டா நியமிச்சிடுவாங்க! அதனாலேதான், உனக்கு ஆயிரக்கணக்கிலே மாசாமாசம் பணம் தந்து அந்த வேலையை செய்யச் சொல்லியிருக்கேன், ஒழுங்கா அதை நீ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.