அதனாலே நாளைக்கு கிளம்புவதற்கு பதிலா, அடுத்த வாரம் வாங்க! அதற்குள்ளே நான் இந்த பார்ட்டியை பணத்தோட ரெடி பண்ணிடறேன், என்ன சொல்றீங்க?"
" புரோக்கர்! உன்னை நம்பலாமா? உன்னை எனக்கு முன்னே பின்னே பரிச்சயம் இல்லையே........."
" உங்களுக்கு செண்ட்ரல் பேங்க் ஜெனரல் மேனேஜர் முகர்ஜியை தெரிந்திருக்குமே, அவரிடம் என்னைப்பற்றி கேளுங்க! அவருக்கு நான்தான் பங்களா வாங்கித்தந்தேன்......"
" நல்லதாப் போச்சு! எனக்கு அவரை நல்லா தெரியும், சரி, நான் அடுத்த வாரம் வரேன், நீ சொல்கிற பார்ட்டியை பணத்தோட ரெடியா இருக்கச் சொல்லு! உடனே பத்திரத்தை பதிவு பண்ணிடலாம், ஓ.கே.யா?"
" ஓ.கே. சார்!"
" சதானந்தம்! முக்கியமான விஷயம்! நமக்குள்ளே உள்ள இந்த முடிவு, வேற யாருக்கும் தெரியவேண்டாம். இப்பவே, ஏஜெண்ட்டை உன்னிடம் என் விசிட்டிங் கார்டை தரச் சொல்றேன், இனிமேல் நீ என்னிடம் நேரிடையா பேசு! சரியா?"
" சார்! என்மேல நீங்க வைத்திருக்கிற அன்புக்கும் நம்பிக்கைக்கும், நானே உங்க பங்களாவை விலைக்கு வாங்கிக்கலாமான்னு நினைக்கிறேன்.........."
" வெரி குட், சதானந்தம்! நீங்களே வாங்கிக்கிறதா இருந்தால், பணத்தை ரெண்டு தவணையாக வாங்கிக்கிறேன், பாவம்! ஒரு கோடி ரூபா ஒட்டுமொத்தமா ஒரே தடவையா தர உங்களாலே முடியாதில்லையா?"
" சார்! உங்க காலை போனிலே காட்டுங்க, அதை தொட்டு கும்பிடறேன், நீங்க தெய்வம் சார்! என்னாலே நம்பவே முடியலே, சார்! சூதும் சுயநலமும் சூழ்ந்திருக்கிற உலகத்திலே, இப்படிக்கூட ஒரு நல்லவர்வாழறதை நம்பவே முடியலே......."
" சரி, போனை ஏஜெண்டிடம் கொடுங்க! உங்களிடம் என் விசிடிங் கார்டை தரச் சொல்றேன்!"
சதானந்தம் விசிடிங் கார்டை பெற்றுக் கொண்டதும், அதை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
" புரோக்கர் சார்! நீங்களே வாங்கிக்கிறதா, ஓனரிடம் சும்மா பேச்சுக்குத் தானே சொன்னீங்க! நீங்க பெரிய ஆள், சார்! உங்க தொழிலுக்கு அவசியமான வசீகரமான பேச்சு இருக்கு, உங்களிடம்! ஆனா பணம் இருக்காது ஒரு கோடி! நல்லவேளை! சார்! உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன், உங்களைப் பார்த்ததும், சொல்லணும் போல இருக்கு! ஆனா அதை யாரிடமும் சொல்லிடாதீங்க, சரியா?"
" சத்தியமா சொல்லமாட்டேன்! என்னை நம்பினவங்களை நான் ஒருநாளும் ஏமாற்ற மாட்டேன்!"