(Reading time: 18 - 35 minutes)

 அவர், கூட்டாளியா எங்க அம்மாவையும் சேர்த்துக்கிட்டு செய்த ரெண்டாவது தப்பு! என்னை ரெண்டு பேருமா சேர்ந்து கொலை பண்ணிட்டு, தூக்கிலே மாட்டி, நான் தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்னது! ஏன் தெரியுமா? சாதி வெறி! பணத் திமிர்! அந்தஸ்து மோகம்! நான் கல்லூரியிலே என்னுடன் படித்த ஒருத்தனை லவ் பண்ணினேன், அவன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன், அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடித்தேன், என்னைப் பெற்றவங்களாலே அந்த அவமானத்தை தாங்கிக்க முடியலே, என்னைவிட தங்கள் கௌரவம்தான் முக்கியம்னு என்னை ரகசியமா கொன்னுட்டு, வெளிநாடு ஓடிட்டாங்க! அந்தப் பிசாசுங்களை, ஆமாம், நானில்லே பேய், பிசாசு, அவங்கதான், உயிரோடு நடமாடற பிசாசுங்க, அவங்களை சட்டத்தின் முன்பு நிற்கவைத்து மரணதண்டனை, இல்லை, இல்லை, ஆயுள் தண்டனை வாங்கித் தரணும், நீங்க! அவங்க தாங்கள் செய்த குற்றத்துக்காக பல்லாண்டு பல்லாண்டு தண்டனை அனுபவிக்கணும், அப்படிப்பட்ட மற்றவங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கணும்,

 கேவலமான இந்த நாற்றமடிக்கிற சமூகத்திலே வாழறதைவிட, பேயா பிசாசா உலவறது எத்தனையோ மேல்! எங்க சமூகத்திலே பொய், புரட்டு, சூது, கொலை, எதுவும் கிடையாது!

 உங்களை நம்பி இந்த காரியத்தை ஒப்படைக்கிறேன், உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் வேவு பார்த்துக்கிட்டே இருப்பேன், அதனாலே ஒழுங்கா நான் சொன்னதை செய்யுங்க! செய்தீங்கன்னா உங்களுக்கு பாதுகாப்பா இருக்கிறதோடு, உங்களுக்கு எல்லா நல்லதும் நடக்க வழி வகுப்பேன், பயப்படாதீங்க!

 நான் வரட்டுமா?" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.