(Reading time: 18 - 35 minutes)

 ஏஜெண்ட் தன் குரலை தாழ்த்திக் கொண்டு, சதானந்தம் அருகில் நெருங்கி வந்து " சார்! ஓனரின் பொண்ணு தற்கொலை பண்ணிக்கலே, அவளை ஓனரும் அவர் பெண்டாட்டியும் சேர்ந்து, கொலை பண்ணிட்டு தூக்கிலே தொங்கவிட்டுட்டாங்க! இதுதான் நடந்த உண்மை! இதை மனசிலே வச்சிக்கிட்டு, எந்த முடிவையும் எடுங்க! சார்! இந்த பங்களாவை எவனாவது ஏமாந்தவன் தலையிலே கட்டி கோடிக்கணக்கிலே நீங்க லாபம் சம்பாதிக்க நான் உங்களுக்கு உடந்தையா இருக்கேன், என்னை கொஞ்சம் கவனிச்சுக்குங்க, போதும்!"

 சதானந்தம் மனதுக்குள் சிரித்துக் கொண்டே, தலையாட்டிவிட்டு நகர்ந்தார்.

 வீடு திரும்பி தன் மனைவியிடம் நடந்ததை சொல்லி ஆனந்தத்தில் இருவரும் கூத்தாடினர்.

 சட்டுனு ஆட்டத்தை நிறுத்திய காசி, கணவனிடம் பேசினாள்.

 " மாமா! திடீர்னு எனக்கு ஒரு பயம் வந்திடிச்சி! ஒருவேளை, நிஜமாவே அந்த பங்களாவிலே பேய் நடமாட்டம் இருந்தால், நாம வாங்கி அங்கே வாழமுடியுமா? கையிலிருக்கிற சொத்தெல்லாம் இழந்து, நாம தெருவிலே நிக்கும்படி ஆயிடுமே............"

 " ஆமாம்....என்ன பண்ணலாம்?"

 " அந்த ஏஜெண்ட் தான், இப்ப நம்ம நண்பராயிட்டரே, அவரிடம் நைச்சியமா பேசி, பங்களா சாவியை வாங்கிடுங்க! இன்னிக்கு ராத்திரி, நாம ரெண்டு பேரும் அந்த பங்களாவிலே தனியா படுத்துப் பார்ப்போம், பேய் நடமாட்டம் இருந்தா, பங்களாவை வேற யாருக்காவது வாங்கித் தந்து கமிஷன் சம்பாதிப்போம். பேய் வரலைன்னா, நாமே பங்களாவை வாங்கிடுவோம், என்ன சொல்றீங்க?"

 " காசி! உன் அறிவுக்கு, நீ எங்கேயோ இருக்கவேண்டியவ!"

 " சரி, உடனே போய் சாவியை வாங்கி வந்துடுங்க!"

 " நான் அவனிடம் போகவேண்டியதில்லே, இப்ப பார்! அவனையே இங்கே வந்து நம்மகிட்ட சாவியை தரவைக்கிறேன்......"

 சதானந்தத்தின் நம்பிக்கை வீண்போகவில்லை. பணத்தாசை பிடித்த ஏஜெண்ட் உடனே ஓடிவந்து சாவியை சதானந்தத்திடம் ஒப்படைத்தார்.

 " நான் இன்னிக்கே போய் பங்களாவை விலை பேசியிருக்கிற அந்த ஏமாளிக்கு பங்களாவை திறந்து காட்டிட்டு, பேய் நடமாட்டம் இருக்கிறதா சொல்கிற புரளியெல்லாம் பொய்னு நிரூபிக்க, இன்னி ராத்திரி அவரும் நானும் பங்களாவிலேயே படுத்துக்கப் போறோம், என்ன சொல்றே?"

 " சார்! என்னை மன்னிச்சிடுங்க! பேய் நடமாட்டம் எல்லாம் உண்மையில்லே, புரளிதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.