டாக்டர் வீட்டுக்கு ஓடினாள்.
" டாக்டர்! ஏதோ சர்டிபிகேட் தரேன்னு சொன்னீங்களே........."
" ரெடியா இருக்கும்மா! இந்தா!"
" டாக்டர்! எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? என் கணவரோட பாடியை அரசாங்க மருத்துவ மனைக்கு தானமா கொடுக்கணும், ஆம்புலன்ஸுக்கு நீங்க ஏற்பாடு பண்ணி பாடியை எடுத்துக் கொண்டு போகச் சொல்றீங்களா?"
" வாவ்! பிரமாதம்! ஒரு நிமிஷம், தானமா ஏன் கொடுக்கறே? நான் செய்யவேண்டியதை செய்து, கண், இருதயம், லிவர், கிட்னி, தோல், இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் விலைக்கு விற்று, லட்சக்கணக்கிலே உனக்கு பணம் வாங்கித்தரேன், பாவம்! கைக்குழந்தையோட நீ தன்னந் தனியா இந்த சமூகத்திலே போராடியாகணும், பணமும் இல்லேன்னா, உன்னை தெருநாயைவிட கேவலமா நடத்துவாங்க, சரியா?"
" டாக்டர்! நீங்க படிச்சவங்க! எல்லாம் தெரிஞ்சவங்க! உங்க சொல்லுக்கு எதிர்ப்பா பேசறேனேன்னு தப்பா நினைக்காதீங்க!
இந்த சமூகம் பணத்துக்காக எவ்வளவு துரோகம் செய்யும், எத்தனை கீழ்த்தரமாக நடந்துகொள்ளும், பணத்தை காட்டி இந்த உடம்பை வெறிநாயா கடித்துக் குதறும்னு எனக்கு தெரிஞ்சு போச்சுங்க! என் புருஷன் உயிர் பிரிந்ததே, அந்தக் கொடுமை தாங்கமுடியாமத் தான்! அதனாலே, பணமே வேண்டாங்க! தானமாகவே என் புருஷன் உடலை கொடுக்கறேங்க, தயவுசெய்து உடனே ஆம்புலன்ஸை வரவழைங்க! நான் வீட்டிலே காத்துக்கிட்டிருப்பேன்......."
அந்த ஏழைத் தாய், இடுப்பில் குழந்தையுடன் வெளியேறியதை பார்த்த டாக்டரின் கண்களுக்கு அவள் சாதாரணப் பெண்ணாகத் தோன்றவில்லை, மாய, வஞ்சக உலகை நன்கு புரிந்துகொண்ட வீராங்கனையாகத் தெரிந்தாள்!