உண்டு. பனிப்பாறையைப் போல, மேல்பார்வைக்கு கடினமாக இருந்தாலும் எளிதில் உருகிவிடும் அவளது குணம் வேறு யாருக்கும் வராது.
ஊர்மிளாவுக்கு கல்யாணமாகி பத்து வருடங்களாய் குழந்தையே இல்லை. மருத்துவர்கள் கை விரித்த நிலையில் வெளியில் தத்து எடுக்கவும் அவள் புகுந்த வீட்டினருக்கு விருப்பமில்லை. அவள் வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு முயன்ற போது எப்படியோ காப்பாற்றிவிட்டனர். ஆனால் பித்து பிடித்தது போல இருந்த அவளைத் தேற்ற மீனுவை அவளிடம் கொடுக்கும்படியும் அவளை தாங்கள் அருமையாக வளர்ப்பதாகவும் அவள் மாமியாரே கெஞ்சியபோது அவள் மீது பரிதாபப் பட்டு தன் குழந்தை மீனுவை தத்து கொடுக்க சம்மதித்தாள் நந்தினி.
மீனு போன நேரம், உடனேயே ஊர்மிளா கர்பமாகிவிட அவள் மாமியார் வீட்டினருக்கு தலை கால் புரியவில்லை. இதுநாள் வரை செல்லக் குழந்தையாக இருந்த மீனு அவர்களுக்கு தேவை இல்லாத பாரமாக ஆனாள். ஊர்மிளாவுக்கு ஐந்து மாதம் நிறைந்ததும் முதல் காரியமாக மீனுவை திரும்பக் கொண்டுவந்து விட்டுவிட்டனர்.
இதில் ஊர்மிளாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டதுதான் அவனுக்கு வருத்தம். அவன் ஒன்றும் பெண்குழந்தையை வளர்க்க வசதியில்லாமல் தத்து கொடுக்கவில்லையே? அவர்களின் தியாகம் பணத்தின் முன் மதிப்பிழந்து போனது., எல்லாமே பணத்தினால் வந்த அகந்தைதான் என்றாலும் தன் உடன் பிறந்தவளுக்கு இவ்வளோ பெரிய தண்டனை அதிகம்தான் என்று அவனுக்குத் தோன்றியது .
மறுநாளும் அவன் ஊர்மிளாவை சென்று பார்த்துவிட்டுதான் சென்றான். ஊர்மிளா இப்போது இருக்கும்நிலையில் அவள் மனசுக்குத்தான் மருந்து தேவை. மீனுவை மறுபடியும் அவளிடம் கொடுத்தால் அவள் மனம் ஆறுதல் அடையும். ஆனால் நந்தினி சம்மதிப்பாளா?
ஊர்மிளா டிஸ்சார்ஜ் ஆகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நந்தினியும் ஒருவாறு கோபம் குறைந்து அவளை போனில் நலம் விசாரித்தாள். மறுநாள் காலை ஆபீஸ் கிளம்பும் போது வாசலில் தெரிந்த அக்காவின் உருவத்தைக் கண்டு பரபரப்புடன் வாசலுக்கு விரைந்தான் பிரவீன்.
“அக்கா என்ன இது . இதுக்குள்ள நீ இப்படி தனியே கிளம்பி வரலாமா? உடம்பு என்னத்துக்கு ஆகும் " என்று உரிமையாய் கடிந்த படி ஊர்மிளாவை உள்ளே அழைத்து அமர வைத்தான் பிரவீன்.
"இதிலே என்னடா இருக்கு? காரிலே ஏறினா இங்கே வந்து இறங்கப் போறேன் , மீனுவைப் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன், எவ்வளோ நாளாச்சு கொழந்தைய பாத்து" என்றாள் ஆவலுடன்.
நந்தினி கண்களில் எச்சரிக்கையுடன் கணவனைப் பார்த்து "என்னங்க, மீனு உள் ரூமிலே