(Reading time: 10 - 19 minutes)

மாட்டேன்.

 உனக்கு எந்த ஊரில் வேலை கிடைத்தாலும், அந்த ஊருக்கு நானும் எங்கள் அலுவலகத்தில் கெஞ்சி கூத்தாடி, மாற்றல் பெற்று, வந்துவிடுவேன்.

 நீயும் நானும் தினமும் கூடுவோம், பழகுவோம், பிறகு இருவரும் பெற்றோரிடம் தெரிவித்து, திருமணம் செய்துகொள்வோம்........"

 " ராஜா! அதுவரையில், நமக்குள் நிகழ்ந்த தவறு, ரகசியமாகவே இருக்கட்டும்!"

 அப்படி ரகசியமாக இருந்த விஷயம், எதிர்பாராமல், தானாகவே வெளிச்சத்துக்கு வந்துவிடுவதை தவிர்க்க முடியாத நிலை வந்ததும்தான், சுவேதா அவனிடம் யோசனை கேட்டாள்.

 " சுவேதா! உனக்கு மட்டுமே தெரிந்த உடல் மாறுதல், பிறருக்கு தெரியாமல் இன்னும் சில நாட்கள் பார்த்துக்கொள்! நான் உடனே என் பெற்றோரிடம் வற்புறுத்தி, உன் வீட்டுக்கு அனுப்புகிறேன், பெரியவர்கள் சம்மதம் பெற்று உன்னை நான் என் மனைவியாக்கி கொள்கிறேன், சரியா?"

 " ராஜா! ஒரு யோசனை! என் வயிற்றில் வளரும் கர்ப்பத்தை, மருந்து மாத்திரை சாப்பிட்டு கலைத்துவிட முயற்சிக்கட்டுமா?"

 " சுவேதா! ஒன்றை நினைவு வைத்துக்கொள்! கடவுள் நமக்கு இதுவரை துணை நிற்கிறான். அவன் அருள் இருப்பதால்தான், உனக்கு சென்னையிலேயே வேலை கிடைத்ததும், எனக்கும் மாற்றல் கிடைத்து, தினமும் நாம் சந்தித்து மகிழ்கிறோம்.

 கருவை கலைப்பதென்பது, கடவுளுக்கு பிடிக்காத செயல்!

 தவிர, அந்த முயற்சி சில சமயம் பெரிய உயிருக்கே ஆபத்தாக முடியும். இல்லையென்றால், கலைக்கிற முயற்சி தோற்று, பிறக்கிற குழந்தை ஊனமாகப் பிறக்கும். காலமெல்லாம் நாம் வருத்தப்படுவோம். வேண்டாம், சுவேதா! நாளையே, இல்லை, இன்றிரவே, நான் என் பெற்றோரிடம் பேசி, நாளை அவர்களை உன் வீட்டுக்கு 'பெண் கேட்க' அனுப்பி வைக்கிறேன். தைரியமாக இரு........"

 அவன் சொன்னபடி, மறுநாள், அவன் பெற்றோர் சுவேதாவின் வீட்டுக்கு வந்தனர்.

 பல வருஷங்களுக்குப் பின், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால், தங்களுக்குள் எப்படி உறவு என்று விசாரித்துக்கொண்டபோது, திடுக்கிடும் உண்மை தெரிந்தது!

 ராஜா, உறவு முறையில், சுவேதாவுக்கு சகோதரன் ஆகிறான்!

 இதை அலட்சியப்படுத்த முடிவு செய்து, மேற்கொண்டு பேசியபோதுதான் தெரிந்தது, சுவேதா ராஜாவுக்கு மூத்தவள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.