(Reading time: 10 - 19 minutes)

பாதகமாக இருந்துவிட்டால், நம் கதி?"

 " ராஜா! யோசித்துப் பார்த்தால், துவக்கத்திலிருந்தே, விதி நமக்கு விரோதமாக விளையாடுகிறது! எனக்கும் இந்த திருவுளச் சீட்டு பரீட்சை அபாயமானதாகத்தான் தோன்றுகிறது."

 " சுவேதா! எந்தக் காரணத்துக்காகவும் நான் உன்னை இழக்கத் தயாராயில்லை. இருவருமே தவறு செய்திருக்கிறோம், அதற்குரிய தண்டனையை மனமார ஏற்போம்! நாளையே நம் நண்பர்களின் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, பெற்றோரின் காலடியில் வீழ்வோம். அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் நம் வழி நடப்போம்!"

 இந்த நேரத்தில், அந்தப் பூங்காவில் இருவர் பேசிக்கொண்டே அவர்களை கடந்து சென்றனர்.

 "இத பாரு! நான் சொல்றதை கேளு! இந்த மனுஷங்களை நம்பறதைவிட, கடவுளை நம்பலாம்! நீ செய்த தப்புக்கு கடவுளிடம் மன்னிப்புக் கேள்! அவன் உன்னை கைவிடமாட்டான்!"

 " ராஜா! இதென்ன அசரீரி வாக்குப் போல நம்மைத் தேடி வந்து நம்ம காதில் விழுது, எனக்கென்னவோ நம்மை சரியான தடத்தில் இட்டுச்செல்ல, கடவுளே தரையிறங்கி வந்திருக்கிறார்னு தோன்றுது, நீ என்ன சொல்றே?"

 " எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. சரி, உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்போம். பிறகு வீடு திரும்பி, திருவுளச்சீட்டு சோதனைக்கு சம்மதிப்போம்."

 சொன்னபடி பிரார்த்தனை செய்துவிட்டு, வீடு திரும்பினர்.

 குழந்தை தவழ்ந்து சென்று எடுத்த திருவுளச்சீட்டு, சுவேதா-ராஜாவை கைவிடவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.