அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை!
" சமையல் கேஸ் தீர்ந்துபோச்சு.....இரண்டு நாளாகியும், இன்னமும் புது சிலிண்டர் வரவில்லை, டெலிவரி பையன்கள் ஸ்டிரைக்காம்!..... அதுதான், சமையலுக்கு தாமதமாயிற்று, இப்ப ரெடி! வாங்க, சாப்பிடலாம்......."
"எலெக்ட்ரிக் குக்கர், மைக்ரோ ஓவன், எல்லாம் வீட்டிலே இருக்குல்லே......?"
" இன்னிக்கு கட்டாயம் புது சிலிண்டர் அனுப்பிடறோம், ஸ்டிரைக் வாபஸாயிடுத்துன்னு போன் வந்தது.....எதிர்பார்த்து காத்திருந்தும், ஏனோ வரலை, அதுதான்........."
" பரவாயில்லை, நீ எனக்காக கவலைப்படாதே! மெதுவாக சமையலை கவனி! நான் ஓட்டல்லே சாப்பிட்டுக் கொள்கிறேன். நல்ல பசியோட வீட்டுக்கு வந்தேன், பரவாயில்லை, நீ போ!"
" வேண்டாம், ஓட்டலுக்கு போகவேண்டாம், சமையல் முடிந்துவிட்டது, வாங்க!"
" மாணிக்கம்! நீ அவசரத்திலே சமைத்தது, வெந்ததும் வேகாமலுமா இருக்கும், என் வயிற்றுக்கு ஒத்துக்காது! பரவாயில்லை, இன்று ஒருநாள் ஓட்டல்லே நல்ல சாப்பாடா சாப்பிடறேனே......"
" அம்மா! அப்பா சொல்றதும் சரிதான்! வீட்டிலே எல்லாருமே, அப்பாவுடன் ஓட்டலுக்குப் போய் நல்ல சாப்பாடா சாப்பிடுவோம், கிளம்பு! டேய், குமார்! சியாமளா! நீங்களும் சட்டுனு கிளம்புங்க, பாவம்! அப்பாவுக்கு பசிக்கிறதாம்..."
என்று மூத்த மகள் ரேகா இடையில் புகுந்ததும், பேராசிரியருக்கு ஒரு விஷயம் உடனே புரிந்தது!
வீட்டுத் தலைவன் என்ற ஆளுமை, மனைவி மாணிக்கத்திடம் மட்டும்தான் செலாவணியாகும், இளைய தலைமுறையிடம் அது செல்லாது!
" ரேகா! வாயை மூடு! அப்பா ஏற்கெனவே கோபத்திலே இருக்கார், நீ வேறே அதற்கு தூபம் போடாதே!"
" அப்பா! உன்னை அம்மா தப்பா புரிஞ்சிண்டிருக்கா, உனக்கு கோபம், தாபம் எதுவுமில்லே, யதார்த்தமாகத்தான் பேசறேன்னு சொல்லு, அம்மாவிடம்! நாங்க ரெடி! ஜாலியா இன்று ஒருநாள் குடும்பத்துடன் ஓட்டல்லே சாப்பிடுவோம்.....குமார்! சியாமளா! ரெடியா?"
" அக்கா! நாங்க வாசல்லே உங்களுக்காக காத்திண்டிருக்கோம், சீக்கிரம் வாங்க!"
பேராசிரியர் அனல்விழி மௌனமாக எழுந்து டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
மாணிக்கம், அவருக்கு உணவு பரிமாறினாள்.
வாசலில் காத்திருந்த குமாரும் சியாமளாவும் உள்ளே வந்து, தந்தைக்கு தெரியாமல்,