(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - இது ரொம்ப கொடுமை - ரவை

ர்மராசனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!

 தன்னைவிட வயதில் மூன்று வயது இளையவள், தனக்கு சிற்றன்னையா?

 அப்பாவுக்கென்ன மனதில் இரக்கமே இல்லையா?

 இந்தக் கொடுமையை சரிசெய்ய, வழியேயில்லாமல், அதே நேரத்தில் அதை ஏற்கவும் முடியாமல், தொண்டையில் சிக்கிய கல்லாக, தர்மராசன் தவியாய் தவித்தான்!

 வீட்டுக்குள்ளேயே வலம் வருபவளை, தனக்கு அன்னமிடுபவளை, தன் தந்தையுடன் பழகுபவளை, வீட்டை கவனித்துக் கொள்பவளை எப்படி நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்க்கமுடியும்?

 நல்லவேளையாக, வீட்டில் முதிய வயதில், அத்தை, அப்பாவின் மூத்த சகோதரி, இருந்ததால், அவளிடம் முறையிட முடிவு செய்தான்.

 அந்த அத்தைதான், அவனை சிறுவயதிலிருந்தே வளர்த்து வருபவள். தாயை இழந்தபோது, தர்மராசனுக்கு மூன்றே வயது!

 கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக, அத்தை யோகாம்பாள்தான் அவனுக்கு எல்லாம்!

 தந்தை சிவராமனுக்கு டூரிங் வேலை! ஊர் ஊராகச் சென்று விற்பனையை கவனித்துக்கொள்ளும் சேல்ஸ் ஆபீஸர் உத்தியோகம்.

 வீட்டில், மாதமொன்றில் நான்கே நாட்கள் தங்குபவரான, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்காத சிறுவனுக்கு எல்லாமாக இருந்தவள், அத்தை யோகாம்பாள்தான்!

 அத்தையின் மூத்த மகளுக்கு திருமணமான பிறகு, அத்தையின் கணவர் திடீரென காலமான நாளிலிருந்து, அத்தை, தம்பி சிவராமனுடன்தான் தங்கியிருக்கிறாள்.

 சிவராமனுக்கும் அவள் உதவி பெரிதும் தேவைப்பட்டது, மூன்று வயது மகன் தர்மராசனை வளர்ப்பதற்கு!

 தனிமையிலிருந்த அத்தையின் மடியில் முகம் புதைத்து, தர்மராசன் குலுங்கி அழுதபோது, அவனை அவள் தடுக்கவேயில்லை.

 ஏனெனில், அவளும் அதே துயரத்தில்தான் தவித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் வளைய வரும் அந்த இளவயது பெண்ணை பார்க்கும்போதெல்லாம், அவள் மனம் பதைபதைக்கும்.

 இதென்ன கொடுமை! மகள் வயதொத்த பெண்ணை எப்படி தன் தம்பி மனைவியாக ஏற்க சம்மதித்தான்? ஒன்றா, இரண்டா இருபத்தெட்டு ஆண்டுகள் இளையவளை தாரமாக கொள்வதா? அந்தப் பெண்ணை பெற்றவர்கள்தான் இதற்கு எப்படி சம்மதித்தார்கள்?

 " அத்தை! உன் தம்பி ஏனிந்த கொடுமையை செய்தார்? அவரிடம் நீ இதுவரை ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.