Page 7 of 7
இதில் பார்க்கவும் முடியும். உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியல வினி! என்றான் பத்து வருடங்களுக்கு முன்னர் அவளிடம் சொன்ன அதே தொனியில். அவளும் வெட்கத்துடன், அருகில் வந்து, “பிரபு, எனக்கும் உன்னைப் பார்க்காமல் பேசாமல் இருக்க முடியல.ஆனால் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் எப்பவும் நர்ஸ் வேலையை விட மாட்டேன்! என்றாள் சிரித்தவாறே.
அம்மாவும் அப்பாவும் சிரிக்கும் குரல் கேட்டதும் காரணம் தெரியவில்லை என்றாலும், அந்த சிரிப்பில் அவர்களின் காதலின் உயிருள்ள பரிசான ப்ரவீனும் கலந்துகொள்ளவும் சிரிப்பொலியில் அறையும் மகிழ்ச்சியில் மனமும் நிறைந்தது.