சொல்லவும்,
“ஆமா! ஆமா! நான் இருந்த பதட்டத்தில் சரியா உங்களைக் கவனிக்கல! இப்போ தான் ஞாபகம் வருது!” என்று சிரித்தவனாய் விடைபெற்றான். அதற்குப் பின்னர், உடற்கல்வி வகுப்பில், யாருக்கேனும் சிறிதாய் சிராய்ப்பு வந்தாலும் வினிதா வேலை செய்த கிளினிக்குக்கே ஓடி வந்தான். சந்திப்புகள் நிகழ்ந்தனவா நிகழ்த்தப்பட்டனவா என்று ஆராயாமல் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் மிகவும் பிடித்திருந்தது. பிரபுவின் நல்ல நேரமோ என்னவோ, அவன் ஆசைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறும் நாட்களாய் மாறின. அதே ஊரில் அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணி கிடைத்தது.
பள்ளி மாறிய பின்னர் சில நாட்கள் அவனால் வினிதாவைக் காணும் சாக்கில் அந்த கிளினிக் பக்கம் அவன் வரமுடியவில்லை. இந்த தவிப்பு புரியாத புதிராய் பிரபுவை வாட்ட, தன் மனம் அவளிடம் இருப்பதை உணர்ந்தான்.அவளுக்காய் பரிசொன்றை வாங்கினான். அவளைக் காணாமலும், அவளிடம் பேசாமலும் இருக்கமுடியாத தனது மனநிலையை அவளிடம் சொல்லத் துடித்தான். ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் என்பதால், வினிதா வேலை பார்க்கும் கிளினிக்கில் பிற நோயாளிகள் யாரும் இல்லை. வினிதா மட்டும், டோக்கன்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள், உள்ளே நுழைந்த பிரபு, “வினிதா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு. அதற்கு உனக்கு ஒரு பரிசு என்றாவறே அவள் கையில் நீட்டினான். ஏதோ சாக்லேட் டப்பாவாக இருக்கும் என்று எண்ணித் திறந்தவளுக்கு வியப்பும் அதிர்ச்சியும். அது ஒரு புத்தம்புதிய நோக்கியா செல்போன்.
எனக்கு எதுக்கு பிரபு?” என்றவளிடம், “என் கூட பேசறதுக்கு!” என்றான்.
“ஏன் என்கிட்டே பேசணும்னு கேட்றாத வினிதா!” எனக்கு உன்கிட்ட பேசிட்டே இருக்கணும், உன்னைப் பார்த்துட்டே இருக்கணும். புது வேலையில் சேர்ந்ததும் இந்தப் பக்கம் வரவே முடியல, உன்னைப் பார்க்காமல் இத்தனை நாளும் முள்மேல நின்னுட்டு இருக்கிற மாதிரி வலிச்சது வினிதா! உனக்கு அப்படி இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல!என்னோட நம்பர் முதல்ல டயல் பண்ணி வச்சிருக்கேன். யோசிச்சுட்டு கால் பண்ணு!” பதிலுக்குக் காத்திராமல் விரைந்துவிட்டான்.
இல்லை என்று அவள் பிரபுவிடம் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டாள் என்றால் அதைத் தாங்கும் சக்தி அவனிடம் இல்லை, எனவே தான் அந்த வேகம்.
அடுத்து நோயாளிகள் வர ஆரம்பிக்கவும், வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.அடிமனதில் அவனே அவளை ஆட்கொண்டிருந்தான் என்பதும் அவள் அறியாதது அல்ல. அவளும் இத்தனை நாள் அவனைக் காணாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தாள்.
மாலை நான்கு மணிக்கு பிரபுவின் போன் ஒலித்தது, வினிதா தான். “பிரபு, நான் நான்!” என்று தயங்கியவளிடம், சொல்லு வினிதா என்றான் பிரபு.
எனக்கும் உன்னைப் பிடிக்கும். பிரபு, எனக்கும் உன்னைப் பார்க்காமல்