சிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை
" கண்ணா! அந்தப் பொண்ணு சிவப்பா, அழகா இருக்காடா, அவளை கல்யாணம் பண்ணிக் கொள்டா!"
" அம்மா! பொண்ணு சிவப்பா இருந்தா, எப்படிம்மா அழகா இருக்கமுடியும்?"
" ஏன்டா? பொண்ணு கறுப்பா இருந்தா, அழகில்லேன்னும், அழகாயிருக்கிறவளை சிவப்பாஇருக்கான்னும்தானே எல்லாரும் பொதுவா சொல்வாங்க!"
" மனசிலே சிவப்பா இருக்கிற பொருட்களை நினைச்சுப் பார்! மிளகாய், தபால்பெட்டியின் சிவப்பு, பொண்ணு இருந்தா, அவ அழகாவா இருப்பா?"
" குதர்க்கமா பேசாதே! கறுப்புக்கு எதிர்ப்பதம் சிவப்பு! பொண்ணை கறுப்பா இருந்தா, அழகில்லேன்னும் அழகா இருக்கிற பொண்ணை சிவப்புன்னுதானே சொல்வோம்."
"வழக்கிலேயிருக்கிறது எல்லாம் சரியாகிவிடாது, கறுப்புக்கு எதிர்ப்பதம், வெளுப்பா, சிவப்பான்னு பட்டி மன்றம் வைச்சா, ராஜா சிவப்புன்னு சொல்வாரு, பாரதி பாஸ்கர், இல்லே வெள்ளைனு வாதாடுவாங்க, தமாஷா இருக்கும், ஆனா அந்தப் பார்வையே தவறும்மா! கறுப்பு, ஒரு நிறம்னா, வெள்ளை இன்னொரு நிறம்தானே தவிர, எதிர்ப்பதம் அல்ல! பல விஷயங்களிலே இப்படித்தான், நாம் இல்லாத சண்டையை உண்டாக்கிடறோம்.... புரிஞ்சிக்காமலே, விரோதம் பாராட்டுவோம். உதாரணமா, உன்னிடம் நானும் அப்பாவும் வந்து, 'அந்தப் பொண்ணு அழகா இருக்காம்மா'ன்னு நான் சொல்ல, அப்பா ' அந்தப் பொண்ணு அழகா இல்லே'ன்னு சொன்னா, நீ என்ன நினைப்பே, ஒருவருக்கொருவர் விரோதமா சொல்றோம்னு! அதுதான் இல்லே, நான் பார்த்தது கமலாவை; அப்பா பார்த்தது விமலாவை! இரண்டுமே சரியா இருக்கலாமே! இன்னும் ஆழமா பார்த்தா, உனக்கு அழகா தெரிகிற பெண், எனக்கு அழகில்லாதவளா தெரியலாமே! நாம பார்க்கிற பார்வையை பொறுத்தது! 'அழகு'ன்னா என்னன்னு ஒருவர் புரிஞ்சிக்கிறதை பொறுத்து, அவங்க பார்க்கிற பெண்கள் தெரிவாங்க........."
" கண்ணா! காலங்கார்த்தாலே, உன்னோட மல்லுக்கு நிக்க
எனக்கு நேரமில்லே, நான்
போய் சமைக்கணும், கண்ணா! நீ அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம்
பண்ணிக்கிறே! அதுதான் என்
விருப்பம்! ஆமாம், சொல்லிட்டேன்!"
கண்ணன் சிரித்துக்கொண்டே நகர்ந்து
தந்தையிடம் சென்றான்.
" குட் மார்னிங் டாட்!"
" மணி பத்தாகுது, குட்