மார்னிங்கா?"
" ஒருத்தரை, அன்றைய
தினத்திலே முதன்முதலா
பார்த்தா, குட் மார்னிங் னு விஷ் பண்றது, வழக்கம்ப்பா!"
" ஓ! புரியறது, நீ என்ன சொல்றேன்னு! நான் அதிகமா தூங்கிட்டு லேட்டா
எழுந்திருக்கிறேன்னு, கிண்டலா?"
"அப்பா! நீங்க வேலையிலிருந்து ரிடையராகியாச்சு! இனிமேல்
தான் லைஃபை எஞ்சாய் பண்ணப்போறீங்க, மிஸ் பண்ணினதையெல்லாம்
சேர்த்துவைத்து அனுபவிக்கப்
போறீங்க!"
" எங்கேடா....? உங்கம்மா, நான் எப்ப ஓய்வு
எடுக்கப்போறேன்னு காத்திருந்து, ரெடியா வைச்சிருக்கா லிஸ்டை! அதிலே உள்ள எல்லா வேலை
களையும் செய்து முடிக்கணும். முதல் வேலை என்ன தெரியுமோ? உன்
மேரேஜ்!"
கண்ணன் மனமார
சிரித்தான்.
" ஏன்டா சிரிக்கிறே?"
" என் கல்யாணம், என்பது
என் வேலை! நீங்க என்ன
செய்யப்போறீங்க?"
" அடப்பாவி! நாங்கதானேடா, அரேஞ்ச்
பண்ணனும்!"
" எந்தக் காலத்திலே
இருக்கீங்க? இப்பல்லாம், ஆணோ, பெண்ணோ, பெத்தவங்களுக்கு, வேலையே வைக்காம, அவங்களே மாசக்கணக்கிலே பேசி முடிவெடுத்து, கல்யாணத்துக்கு நாள், இடம், பிக்ஸ் பண்ணி, இன்வைட்
ரெடி பண்ணி, முதல்லே அப்பா, அம்மாவுக்கு தராங்க!
பெத்தவங்களுக்கு அந்த ஒரு மரியாதை தான்! வேற வேலை எதுவும் கிடையாது......"