" எதுக்குடா?"
" அம்மாவைப் போல, அழகா, அறிவுள்ளவளா, கண்டிப்பானவளா, பெத்த
பிள்ளையை சரியா வளர்க்கிற
தாயா செலக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு!"
" ஆமாம்டா கண்ணா! எங்கப்பா, அம்மா, ஏதோ ஒரு
பட்டிக்காட்டை என் தலையிலே கட்டறதுக்கு
இருந்தாங்க, நல்லவேளை, என் லைஃபிலேயே, முதல்முறையா, தைரியமா
அப்பா, அம்மாகிட்ட சண்டை
போட்டு உங்கம்மாவை நானே செலக்ட் பண்ணினேன்.........."
" நான் உன்னுடைய ஒன்லி சன் ஆச்சே, நானும்
உன்னைப்போலத் தான்
ஆசைப்படறேன்......."
" ஏய்! நீ எங்கே வரேன்னு தெரியும்டா! அதான்
நடக்காது, இவரோட அப்பா அம்மா இவருக்கு பயந்திருக்கலாம், நான் அப்படியில்லே........"
" மாம்! நீ அவசரப்படறே! நான் சொல்ல
வந்ததே வேறே! நாம கும்பிடற தெய்வம், பிள்ளையார், என்ன கேட்டார்? 'எங்கம்மாவைப்போல இருக்கிற பெண்ணைத்தான்
கட்டிக்குவேன்னு இன்னிக்கும்
நடுத்தெருவிலே நிக்கிறாரு!
அவருதான் என் குருநாதன்!
எனக்கு மனைவியா வரப்போறவ, என் அம்மாவைப்
போல, அழகா, அறிவுள்ளவளா, தைரியசாலியா, விவேகமானவளா, தன் பிள்ளைகளை கண்டிச்சு
வளர்க்கிறவளா, எல்லா செயல்களிலும் எங்கம்மாவைப் போலவே இருக்கணும்
என்பதுதான் என் கண்டீஷன்!"
" என் ராசா! ஓ.கே.டா!
உன் கண்டீஷன் அக்செப்டெட்!"
" மீனா! அவன் சொன்னது பாதி! சொல்லாத மீதியை நான் சொல்றேன்:
எப்படி நீ, என்னை உன்