" தேங்க்ஸ்டா! உங்கம்மா படுத்தற பாடு, ஹோல் நைட் தூங்கவிடலே!
இதை அவளிடம் சொல்டா!"
" என்னை வம்பிலே
மாட்டிவிடறியா? உன் டார்லிங்கிடம், நீயே சொல்லிடு, பை!"
" நீ எஸ்கேப் ஆயிட்டே
சரி, சமாளிக்கிறேன்......"
மனைவியிடம் பேச,
மாதவன், சமையலறைக்குள்
நுழைந்தார்.
" டார்லிங்! காபி தரியா?"
" அரைமணி நேரத்திலே, சாப்பாடே ரெடி
ஆயிடும், இப்ப காபி குடிச்சா
சாப்பிட முடியாது! போய் நியூஸ்பேப்பர் படிங்க!"
" டார்லிங்! உன் மகன் சொல்லிட்டுப்போறான்,
அவன் கல்யாணத்தை அவனே
அரேஞ்ச் பண்ணிக்கிறானாம்,
நம்மை நிம்மதியா இருக்கச்
சொல்றான்!"
" அவன் சொல்றான்னு
இங்க வந்திட்டீங்களா, காபி
குடிக்க! செவிள்லே ரெண்டு
அறை விட்டு, அவனை ஒழுங்கு மரியாதையா, நாம
பார்த்துவைக்கிற பெண்ணை
கட்டிக்கச் சொல்லுங்க!"
" இருதலைக் கொள்ளி எறும்பாயிட்டேனே!
இப்ப என்ன செய்யலாம்?"
" போய் கிளிஜோசியம்
பாருங்க!"
" ஆமாம், என்னை விரட்டறியே, உன் பிள்ளையிடம் நீயே பேசேன்!"