" ஐ ஆம் சாரி! எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லிடறேன்......."
" அப்பாடா! எதுவாக இருந்தாலும் தைரியமா பேசு! நான் தப்பா நினைக்கலே..."
" இந்த கொரோனா தொற்று, ஊரடங்கு சட்டம், அது இதுனு, ரெண்டு மாசமா உங்க ஓட்டல் நாடு முழுவதும் மூடியிருக்கிறதனாலே, பணம் எக்கச்சக்கமா உங்களுக்கு நஷ்டமாயிருக்குமே, பணம் தேவைன்னா, நான் தரேன்! அதை சொல்லத்தான் வந்தேன்........"
" ரொம்ப தேங்க்ஸ்!"
" எல்லாமே கறுப்புப்பணம், சீட்டு, நோட்டு, எதுவும் கேட்கமாட்டேன், நம்பிக்கை யிலே தரேன், எப்ப முடியுமோ கொடுங்க!"
" அப்படி என்னிடம் நம்பிக்கை வரும்படி, என்னை எந்த அளவுக்கு தெரியும்?"
சப்னா எழுந்து, முத்தய்யா உடலை தன் கைகளாலே அணைத்து, " இந்த அளவுக்கு போதுமா?" என்றவாறே கன்னத்தில் முத்தமிட்டாள்.
" சப்னா! நாளைக்கு காலையிலா இன்கம்டாக்ஸ் ரெய்டு? இன்னிக்கு ராத்திரி, பணத்தை இடம் மாற்றணும், யாருக்கும், உன் மேனேஜர் கூடத்தான், தெரியாம அதை செய்யணும், அவ்வளவுதானே? எப்ப ஆள் அனுப்பணும்?"
" சூப்பர்! இதுக்காக இன்னொரு முத்தம்!"
" சரி, கறுப்புப் பணம் எவ்வளவு, பேக் பண்ணி ரெடியா இருக்கா?"
" எல்லாம் ரெடி! நான் உடனே வீட்டுக்கு போய், மற்றவங்களை வெளியிலே அனுப்பிட்டு, உன் ஆளுக்காக காத்திருக்கேன், அந்த ஆள் பேரு, அவன் போட்டோவை இப்பவே என்னிடம் கொடு! அதை வைத்து சரிபார்த்துக் கொண்டு, பெட்டியை தரேன்! அதை எந்த இடத்தில் வைக்கப்போறேன்னு இப்பவே சொல்லிடு, அந்த இடத்தின் சாவியையும் என்னிடம் கொடு! ரெண்டே நாளிலே பெட்டியை திருப்பி எடுத்துண்டு, உன்னிடம் சாவி திருப்பிடறேன்!"
" சப்னா! முத்தம் தந்தே என்னை முட்டாளாக்காதே! என்னை நம்பலேன்னா, நீ வேற ஆளைப் பாரு!"
" உன்னை நம்பித்தானே வந்திருக்கேன்....."
" என்னை நம்பறது, உண்மைன்னா, பெட்டியை நான் வைக்கப்போற இடத்தின் சாவியை கேட்க மாட்டே? எவ்வளவு பணம்னு சொல்ல மறுக்கமாட்டே...."
சப்னா யோசித்தாள். " சப்னா! எனக்குத் தெரியும் நீ இதற்கு முன்பு நம்பின நாலு நடிகனும் உன்னை ஏமாத்தி உன் பணத்தை திருடிக் கொண்டாங்க, நானும் அதே மாதிரி செய்வேனோன்னு நீ பயப்படறே, நியாயம்தான்! ஆனா, உனக்கு ஒரு கேரன்டீ தரேன், பெட்டியை நானே வந்து எடுத்துக்கொண்டு, உன்னையும் அழைத்துக் கொண்டு, பெட்டியை