Page 11 of 11
வேண்டியது....”, இன்ஸ்பெக்டர் எத்தனை பேரிடம் இப்படி கேஸ் வாங்கினாரோ... இருக்கும் அத்தனை கோவத்தையும் வரதனிடமும், க்ருஹாவிடமும் காட்டி விட்டார்...
இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்குமாறு கூறிவிட்டு அவர் கிளம்ப வரதன் கதவை சாற்றிவிட்டு க்ருஹாவை முறைத்தபடியே வந்தமர்ந்தான்....
“இங்க பாருடி, இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்... இனி ஜாதகம், ஜோசியம், பரிகாரம்ன்னு எதையானும் பண்ணின... அவ்வளவுதான்...”, வரதன் கத்த, க்ருஹா திருட்டுப் போன பொருட்களை கண்டுபிடிக்க என்ன பூஜை பண்ணலாம் என்று இன்டர்நெட்டில் மிக உன்னிப்பாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்...
உங்களில் யாருக்கேனும் அதில் அனுபவமிருந்தால் க்ருஹாவை காண்டாக்ட் செய்யவும்.... க்ருஹாவிடமிருந்து தக்க சன்மானம் கிடைக்கும்...