சுப்பு மாமி...
“அந்த ப்ரோமோஷன் கிடைக்காததுலேர்ந்து இவர் சரியே இல்லை மாமி... எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார்.... முன்னாடிலாம் நான் கண்ணால சொன்னத கையால உடனே செஞ்சு முடிப்பார்... ஆனா இப்போலாம் என் கண்ணை என்ன, என்னையே பார்க்கறதில்லை....”, க்ருஹா வருத்தத்துடன் சொல்லி முடிக்க, இவள் கண்ணால் அடுக்களையைக் காட்டினால் வரதன் அவன் கையால் காபி போட்டு நீட்டும் காட்சி மாமி கண் முன் வந்து போனது....
“ஹ்ம்ம்... நீ சொல்றதைக் கேக்க நேக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... எங்க ரெண்டு நாளா வரதனை பார்க்கவே முடியலை...”
“ஏதோ ஆபீஸ் வேலையா பெங்களூர் வரை போய் இருக்கார்... சனிக்கிழமைதான் வரார்..... நீங்களே சொல்லுங்கோ இத்தனை கஷ்டம் இருக்கறச்ச நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்...”
“க்ருஹா இதெல்லாம் நேக்கு என்னவோ கிருகக்கோளாறா தெரியறது...”
“என்ன மாமி, இப்படி நடக்கறது எல்லாம் என்னாலதான்னு சொல்றேளா....”
“ஏண்டி... சொல்றத ஒழுங்கா கேக்கவே மாட்டியா... நான் சொன்னது க்ருகக்கோளாறு, க்ருஹா கோளாறு இல்லை... அதுதான் கல்யாணம் ஆன நாள்லேர்ந்து வரதனுக்கு இருக்கே...”
“என்ன மாமி சொல்றேள்... இத்தனை வருஷம் இல்லாம எங்கே இருந்து இந்த கோளாறு வந்தது...”
“இதெல்லாம் சீசனல் கோளாருடி எப்பவும் வராது.... எப்பவாவதுதான் வரும்....”
“என்ன மாமி என்னனவோ சொல்றேள்... நேக்கு வயத்துல புளியைக் கரைக்கறது.... கிரகங்கள் எல்லாம் அத்தனை பொல்லாதா...”
“ஆமாண்டி, ரஜினிக்கூட சொல்லி இருக்கார் பாரு... ஒன்பது கிரகமும் உச்சத்துல இருக்கற ஒருத்தனாலதான் இதைப் பண்ண முடியும்ன்னு....”
“அதுக்குள்ளையும் எங்காத்து நியூஸ் ரஜினி வரைக்கும் தெரிஞ்சு அதுக்கு அவர் ஸ்டேட்மெண்ட் வேற கொடுத்துட்டாரா....”
“க்ருஹா ஏண்டி இப்படி பேத்தற... அவர் சொன்னது சினிமால....”
“மாமி என் நிலைமை எப்படி ஆயிடுத்து பார்த்தேளா... நீங்கள்லாம் என்னை ஓட்டற அளவுக்கு இருக்கு.... இதை எப்படி மாமி சரிப்படுத்தறது...”
“கோளாறுன்னு இருந்தா அதை சரிப்படுத்த பரிகாரம்ன்னு ஒண்ணு இருக்கும்... அதனால நீ எதுக்கும் கவலைப்படாத...”
“என்ன பரிகாரம்ன்னு சொல்லுங்கோ மாமி... உடனே பண்ணிடலாம்...”
“அதெல்லாம் நான் சொல்ல முடியாதுடி... அதுக்குன்னு இருக்கற ஸ்பெஷல்லிஸ்ட்தான் வந்து