“சரி சரி உடனே கண்ணைக் கசக்காத... எதுக்கு அடுத்த வாரம் நான் லீவ் போடணும்... எங்கயானும் வெளில போறோமா... இல்லை ஏதானும் function வர்றதா....”
“இல்லைனா... உங்களுக்கு கொஞ்ச நாளா உடம்பு, வேலைன்னு எல்லாப்பக்கமும் படுத்திண்டு இருக்குன்னு நான் நம்ப சுப்பு மாமிக்கிட்ட சொன்னேன்.... அதுக்கு அவா இதெல்லாம் கிருகக்கோளாறு பரிகாரம் பண்ணினா சரியாப்போய்டும்ன்னு சொன்னா... அதனால....”
“அதனால சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லித் தொலைடி....”
“எதுக்கு இப்போ BP பேஷன்ட் மாதிரி கத்தறேள்.... அமைதியா கேளுங்கோ.... அதனால வர்ற புதன்கிழமை நம்மாத்துக்கு ஒரு மாந்த்ரீகர் வரார்...”
“எனக்கு உடம்பு படுத்தினதுக்கு காரணம் நீ பண்ணின கஷாயம், எந்த கிரகமும் இல்லை.... எப்போப் பாரு ஜாதகம், ஜோஸியம் பரிகாரம்ன்னு எதையானும் பண்ணி என்னைப் படுத்தறதே உனக்கு வேலையா போச்சு...”
“இல்லைன்னா இது முன்னாடி மாதிரி இல்லை... சுப்பு மாமிக்கு தெரிஞ்சவா சொன்னது... அந்த மாந்த்ரீகர் ஏவல், பில்லி, சூனியம் இப்படி எது இருந்தாலும் எடுத்துடுவாராம்...”
“ஏண்டி உனக்கு சுப்பு மாமியவே கொஞ்ச நாளாத்தான் தெரியும்.. இதுல அந்த மாமிக்குத் தெரிஞ்ச மாமி சொன்னான்னு சொல்ற... இதல்லாம் நன்னா இருக்கா...”, இதை வெளியில் சொன்ன வரது, “நம்மாத்துல இருக்கற ஒரே துர்ராத்மா நீதான்... உன்னைத் துரத்தினா எல்லாம் சரியாய்டும்... ஆனா அது இந்த ஜென்மத்துல நடக்காதே..”, என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்... வெளியில் சொன்னால் சூலம் இல்லாமலே வதம் செய்துவிடுவாளே....
வரது தன் திறமை முழுவதும் பிரயோகித்து வாதம் செய்தபோதும், க்ருஹாக்கு முன் டெபாசிட் இழந்த அரசியல்வாதியாக தோல்வியைத் தழுவினான்... எப்பொழுதும் போல், “கல்யாணம் பண்ணின நாள்லேர்ந்து...”, என்று ஆரம்பித்து அரை மணிக்கு க்ருஹா பிலாக்கணம் பாட, அதிலிருந்து தப்பவே அந்த மாந்த்ரீகர் வர ஒப்புக்கொண்டான் வரது...
க்ருஹா மிகவும் எதிர்பார்த்த, வரது வரவே கூடாது என்று வேண்டிய புதன்கிழமையும் வந்து சேர்ந்தது...
இப்பொழுதெல்லாம் பூஜை, வைதீகம் என்று எந்த காரியமாக இருந்தாலும் காண்ட்ராக்ட், சப் காண்ட்ராக்ட் என்று படு கமர்ஷியல் ஆகிவிட்டது... பூஜை மட்டும் என்றால் ஒரு ரேட், பூஜை சாமான்களுடன் என்றால் ஒரு ரேட், அதனுடன் பூஜைக்கு வேண்டிய பூக்களுடன் என்றால் ஒரு ரேட் என்று பல பாக்கேஜ் வைத்திருக்கிறார்கள்...
பூஜை என்பதிலேயே ஏகக் கடுப்புடன் இருக்கும் வரதுவை, இந்த சாமான்கள் வாங்குவதற்காக வேறு அலைக்கழித்தால் இன்னும் டென்ஷன் ஆகிவிடுவான் என்பதால் க்ருஹா மூன்றாவது