பாக்கேஜை ஓகே செய்துவிட்டாள்... எனவே புதனன்று அத்தனை பூஜை சாமான்களுடனும், இரண்டு உதவியாளர்களுடனும் வந்து சேர்ந்தார் மாந்த்ரீகர்...
உள்நுழையும்போதே ஏதோ bomb squad போல slow motion-ல் நாலாப்புறமும் பார்த்தபடியே வந்தார்... அவரின் வருகையே வரதனுக்கு சற்று பீதியைத் தந்தது.... க்ருஹா ஏதோ, அந்த பரந்தாமனே நேரில் வந்து துஷ்ட சக்திகளை சம்ஹாரம் செய்யப் போவது போல் அவரை பக்தி ஸ்ரத்தையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்...
நல்ல வேளையாக குழந்தைகள் அன்று பள்ளிக்கு சென்று விட்டன... வரதன் கட்டாயமாக அவர்களை பள்ளிக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்று சற்று அழுத்தி கூறியதால் வேறு வழியில்லாமல் அனுப்பி இருந்தாள்...
இவர்கள் வீட்டில் ஏதேனும் துஷ்ட சக்தி இருந்தால் அதை எடுக்கவும், மேலும் பரிகார பூஜையும் நடக்கவிருப்பதால் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே அங்கு இருக்கலாம் என்று அந்த மாந்த்ரீகர் கூறியிருந்ததால் சுப்பு மாமியும் வரவில்லை என்று கூறிவிட்டார்... ஆகவே இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில்...
இன்று இவர்கள் வீட்டிற்கு வந்த மாந்த்ரீகர் ஆல் இன் ஆல் அழகுராஜா... கை ஜோசியத்தில் ஆரம்பித்து ஜாதகம், நேமாலஜி, நியூமராலஜி, வாஸ்து என்று அனைத்தும் தெரிந்தவர்... கூடவே துர்ராத்ம்மாக்களை துரத்துவதிலும் வல்லவர்...
இவரைக் கண்டுபிடித்துக் கூப்பிட்டதில் க்ருஹாக்கு ஏக பெருமை... ஒரே ஆளே இவர்களின் அத்தனை கஷ்டங்களும் எதனால் என்று கூறிவிடுவாறே... தனித்தனியாக செலவழிக்க வேண்டாமே என்று....
ஆனால் அந்தப் பணத்திற்கு பூஜைக்கு புதிதாக சேலை வேண்டும் என்று க்ருஹா பாரம்பரா பட்டு வாங்கியது தனிக்கதை...
உள்ளே நுழைந்த மாந்த்ரீகர் வாசலிலிருந்தே ஏதோ மந்திர உச்சாடனம் செய்தபடியே வந்தார்.... கூடவே திரும்பிய மூலைகளிலெல்லாம் எலுமிச்சம் பழத்தை வைத்தபடியும்... அவர் பழம் வைக்கும்போதெல்லாம் கூட இருக்கும் அஸிஸ்டன்ட்கள் ஹை பிச்சில் ஏதோ மந்திரம் கூற அந்த குரலில் வரதனுக்கு அல்லு விட்டது....
வரதன் வீட்டிலிருக்கும் ஸ்வாமிக்கு போற போக்கில் ஒரு சலாம் வைத்து விட்டு போகும் கேட்டகிரி... நாள் கிழமை என்றால் கூட ஒரு ஹலோவும் இருக்கும்... அவ்வளவே... மற்றபடி பூஜை, புனஸ்காரம் என்று கடவுளை வேரோடு பிடுங்குவது அவ்வீட்டில் கிருஹா மட்டுமே...
கிருஹா பூஜை, பரிகாரம் என்று கூறும் நாட்களில் வெளியூர் சாக்கு வைத்து இதுவரை எஸ்கேப் ஆகி வந்தான் வரதன்.... இந்த முறைதான் வேறு வழியில்லாமல் வசமாக