குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டதாக அவன் கூற சற்று ஆசுவாசமடைந்து அமர்ந்தனர் இருவரும்... குளித்து முடித்து பூஜையிடத்தை கிளீன் செய்வதற்காக வந்த கிருஹா பார்த்தது ஏற்கனவே சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த கூடத்தைத்தான்...
“ஏன்னா... இங்க சீக்கிரம் வாங்கோளேன்... “, க்ருஹா அலற, அடித்து பிடித்து ஓடி வந்தான் வரது... அங்கே அவன் கண்டது, கோலத்தைத் தவிர காலியாக இருந்த அறையைத்தான்.... வரதன் ஓடிச் சென்று பூஜையறையும், பீரோ இருந்த அறையையும் பார்க்க.... பீரோ திறந்தபடியே கிடந்தது... பூஜையறையிலும் எந்த வெள்ளி சாமானும் காணவில்லை....
“ராத்திரி நம்ம நன்னா தூங்கிண்டு இருக்கறச்ச திருடன் வந்துட்டான் போல இருக்கே... அச்சோ அத்தனை நகையும் போச்சே.... எங்காத்துல கல்யாணத்துக்கு குடுத்த ஒரு வெள்ளிப் பாத்திரமும் காணும்... உங்கம்மா வெள்ளி குடம் கொடுத்தா அதையும் காணோமே....”
“திருடன் யாரும் வெளில இருந்து வரலைடி.... நாமதான் போன் மேல போன் போட்டு அவனை வரவச்சிருக்கோம்...”
“என்னன்னா சொல்றேள்...”
“ஹ்ம்ம் கடைசியா வந்தது நேத்து வந்தாரே அந்த ஸ்வாமிஜியோட சிஷ்யன்... அவன்தான் எல்லாத்தையும் திருடிண்டு போய் இருக்கணும்...”
“ச்சே ச்சே என்ன பேத்தறேள்.... அவர் எத்தனை பேர் போன ஸ்வாமிஜி தெரியுமோ... இன்டர்நெட்ல அப்படி போட்டு இருக்கா அவரைப் பத்தி....”
“உன் இன்டர்நெட் அறிவுல இடி விழ.... கண்டிப்பா அந்தாள்தான் திருடி இருக்கணும்... இரு நான் போலீஸ்க்கு போன் பண்றேன்... நீ அந்த சுப்பு மாமிக்கிட்ட அந்தாள் டீடைல் கேளு....”
“அது வந்துன்னா.... இந்த ஸ்வாமிஜி சுப்பு மாமி சொன்னவர் இல்லை... அவர் வெரும்ன்னு ஜாதகம் மட்டும்தான் பார்ப்பாராம்... தனித்தனியா ஒவ்வொரு தோஷத்துக்கும் பரிகாரம் பண்ணனும்ன்னு மாமி சொன்னா... நான்தான் எதுக்கு வீணா தனித்தனியா செலவு பண்ணனும்ன்னு ஒரே ஆளா இருக்கட்டும்ன்னு இவரைத் தேடி பிடிச்சேன்... இவரோட ப்ளாக்ல அத்தனை சினிமாக்காராளோடையும் இவர் போட்டோ இருக்குன்னா... அத்தனை பேருமா ஏமாந்திருப்பா... நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுண்டு இருக்கேள்...”
“சுத்தம்.... உனக்கு ஏண்டி இந்த பெருந்தனம்.... தெரியாதவாளை ஆத்துக்கு கூப்பிட்டு இருக்கற... போறாததுக்கு அத்தனை வெள்ளி, தங்க சாமானையும் பரப்பி... ஆண்டவா, உன்னை வச்சுண்டு முடியலை....”, க்ருஹாவை கத்தியபடியே அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு அழைத்தான் வரதன்....
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்த காவல்துறையினரிடம் வரதன்