இருந்தா தானக்கா கூட்டிட்டு வர முடியும்.
இப்பொழுது அதிர்ச்சி ஆவது அமுதாவின் முறையானது.
என்ன ஆறு வருசமாச்சு இன்னும் குழந்தை பொறக்கலயா......
சுசி அழுதுக் கொண்டே..... நான் உங்களுக்கு பண்ண துரோகத்துக்குதான் அந்த ஆண்டவன் என்ன தண்டிச்சிட்டான்கா!!! வயித்துல புழு பூச்சி வர மாட்டுதுக்கா. ஏறாத கோவில் இல்ல. பார்க்காத டாக்டர் இல்லக்கா.
ஏய் சுசி அழுகுறத நிப்பாட்டு.. நீ எனக்கு எந்த துரோகமும் பண்ணல வீணா மனச போட்டு குழப்பக்காத சரியா. இது நானா எடுத்த முடிவு.
தினேஷ் என்ன சொன்னாரு சுசி.
அவர் என்னக்கா சொல்வாரு. உங்களுக்கு பண்ண துரோகம்தான் இப்புடி எங்கள வாட்டுதுனு அவர் எப்பவோ உணர்ந்துட்டாரு. ஆனா மனுசன் வாய தொறந்து சொல்லல அவ்வளவுதான்.
ஆம், தினேஷ் - இன் முதல் மனைவி தான் அமுதா பெற்றோர்களின் வற்புறுத்தலில் நடந்த திருமணம்.
பெண்களுக்கே உள்ள பல கனவுகளோடு நுழைந்தாள் முதலிரவு அறையில்,
ஆனால் அவனோ கடும் கோபத்துடன் வார்த்தைகளால் அவளை சுட்டுவிட்டான்.
இங்கபாரு..... இது எனக்கு விருப்பபட்டு நடந்த கல்யாணம் இல்ல..... எனக்கு மனைவியாகுறதுக்கு ஒரு தகுதி வேணும். இப்புடி கருகருன்னு படிக்காத பட்டிக்காட கட்டி நான் எப்புடி வாழ முடியும். ஒழுங்கா நீயே என் வாழ்க்கை விட்டு போனா உனக்கு நல்லது.