”அவரா அவரும் நம்மளை மாதிரி ஒரு மனுஷன்தான், கடவுள் அனுப்பி வைச்ச தூதர் அவரு, மக்களோட பாவங்களை போக்கினாரு, கஷ்டப்படற மக்களுக்கு ஆறுதலா இருந்தாரு, தப்பானவங்களை திருத்தினாரு, அதனால அவரை எல்லாரும் கடவுளா பார்க்கறாங்க, அவர் பிறந்த நாளை உலகம் முழுக்க விழாவா கொண்டாடறாங்க இப்ப புரியதா”
”ஒரு மனுஷனோட பிறந்தநாளை கொண்டாடனுமா என்ன”
”அவர் சாதாரணமானவர் இல்லை”
”வேற பெரிய சாமியாரா”
”ம்க்கும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது அஆஆ உன் குலதெய்வம் யாரு”
”கருப்புசாமி“
”அவரும் மனுஷன்தானே, அவரை மட்டும் ஏன் கும்பிடற”
”அவர் எல்லாரையும் காப்பாத்தறவரு”
”அதே போலதான் கிறிஸ்துவும், மக்களை காப்பாத்தறவரு”
”ஓஹோ ஆமா பண்டிகைக்கு என்னெல்லாம் செய்திருக்க”
”என்ன செய்தேனா வந்து பாரு வா வா” என அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
நடுவீட்டில் சிறியதாக ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, அதற்கு வண்ண வண்ண விளக்குகள் சுற்றி பெல், பரிசுப்பொருட்கள் என கட்டி அழகு செய்திருந்தான்
”எலேய் என்னல்ல இது”