”அப்புறம் எப்படி உனக்கு பரிசு தருவாரு”
”அவர் அப்படித்தான் தருவாரு, அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது”
”அதெல்லாம் முடியாது நீ புரியற மாதிரி சொல்லு”
”அடடே உன்னோட பெரிய நசய்யா, சொன்னாலும் உனக்குப் புரியாது, இதப்பாரு சான்டாக்ளாஸ் நைட் நேரத்தில ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் நுழைஞ்சி”
”ஓ திருட்டுப்பயலா இவன்“
”சுத்தம் யோவ் ஏன்யா இப்படி பேசி வைக்கற, அவர் ஒண்ணும் திருட்டுப்பயல் கிடையாது, ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து பரிசு பொருள் தருவாரு, அவர் நல்லவர்யா”
”அப்படியா ஆமா அது என்ன” என அவர் சாக்லேட் கூடையை பார்த்து கேட்க அதற்கு ராபர்ட்
”சான்டா க்ளாஸ் வந்தா சாப்பிடறதுக்காக இதை வாங்கி வைச்சிருக்கேன்”
”ஏன் அந்தாளு சோறு சாப்பிடமாட்டாரா”
”ஆமா அவர் ஒண்ணும் சோத்துக்கே வழியில்லாதவரா, அவரு வீடு வீடா வந்து சோறா சாப்பிடுவாரு, பண்டிகைன்னா உன் வீட்ல பலகாரம் சுட்டு சாமிக்கு படைப்பல்ல, சாமியா வந்து சாப்பிடுது, நீதானே சாப்பிடற அது போல இல்லாம நாங்கள்லாம் சான்டா க்ளாஸ்க்கு சாக்லேட்டு, கேக்கு, இனிப்பெல்லாம் வாங்கி வைப்போம், இன்னும் நிறைய வீடுகள்ல சான்டாக்கு தர்றதுக்காக பரிசுகள் கூட வாங்கி வைப்பாங்க தெரியுமா”
”அப்படியா ம் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”
”இதப்பாரு கண்டிப்பா சான்டா வருவாரு, நான் பார்க்கலைன்னாலும் விடிஞ்சிப் பார்த்தா பரிசு