(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”அப்புறம் என்ன விசயம், என் வீடு தேடி வந்திருக்க, சும்மாலாம் நீ வரமாட்டியே, பலகாரம் கொடுத்திருக்க என்னால ஏதோ காரியம் ஆகனும் உனக்கு, அது என்னன்னு சொல்லு கேட்போம்” என கேட்க கதிரேசனோ

  

”ஒண்ணுமில்லை ஏதோ நீ வேலையிருக்குன்னு சொன்னியே அது என்ன ஏதுன்னு பார்க்க வந்தேன், உனக்கு வேலையெல்லாம் செய்ய வருமோ” என நக்கலாக கேட்க

  

”இந்த குசும்புதான் வேணாம்ங்கறது, கிறிஸ்துமஸ் பண்டிகை வருதுய்யா அதான் வீட்ல நிறைய வேலை செய்றேன்”

  

”ஆமா அதென்ன கிறிஸ்துமஸ் பண்டிகை அப்படின்னா”

  

”ஓ உனக்குத் தெரியாதுல்ல, தெரிஞ்சிக்கவும் நீ ஆசைப்பட்டதில்லை, ஏதோ இப்பவாச்சும் கேட்கறியே அது ஒண்ணுமில்லை பெரிசு, கிறிஸ்துமஸ்னா ஒரு பண்டிகை, கிறிஸ்து பிறந்த நாளை நாங்க கொண்டாடுவோம்”

  

”அவர் யாரு“

  

”யாரு”

  

”அதான் சொன்னியே இப்ப யாரு அது கிறிஸ்துவா யார் அது”

  

”சரியா போச்சி உனக்கு இதுவும் தெரியாதா”

  

”நான் ஏன்டா இதை தெரிஞ்சி வைச்சிக்கனும்”

  

”பொது அறிவுக்காக கூடவா தெரிஞ்சிக்க மாட்ட”“

  

”சரி சொல்லு அவர் யாரு”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.