இருந்தாள்... வேலைக்கு செல்வது தனக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று தோன்றவும்,
“எத்தனை நாள் இதே சுவரை பார்த்துட்டு இருப்பது, நான் நாளையில் இருந்து ஆபிஸ் போகலாம்னு இருக்கேன்...” என்றாள்.
திடீர் என்று சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்த போதும் பெரியவர்கள் இருவரும் அவளை தடுக்கவில்லை...
மறுநாள் காலையில் கிளம்பி அலுவலகம் சென்றவள், மற்றவர்களின் பரிதாபம் + பேசலாமா வேண்டாமா என யோசிக்கும் பார்வைகளையும் கண்டும் காணாமல் தன்னுடைய கேபினுக்குள் சென்று வேலையை தொடங்கினாள்.
மெல்ல வேலையில் மூழ்க துவங்கிய நேரம்... அவளுடைய IM மின்னியது...
பெங்களுருவில் இருக்கும் அவர்கள் ப்ராஜக்டின் க்ரூப் ப்ராஜக்ட் மேனேஜர் சந்தியாவிடம் இருந்து செய்தி வந்திருந்தது.
“call me...”
உடனேயே சந்தியாவை அழைத்தாள்.
“ஹலோ சந்தியா!”
“Hi Mithra, how are you?”
(எப்படி இருக்கிற மித்ரா?)
“Better Sandhya!”
(பரவாயில்லை சந்தியா!)