(Reading time: 38 - 75 minutes)

 

அப்புறம் ஒரு நாள், நீ கனவு கண்டுட்டு இருந்தியே, அன்னைக்கு உன்னோட வெட்கமும், இன்னொரு காலை கூட புண்ணாக்கிப்பேன்னு சொன்ன வார்த்தைகள் தான், உன் மனசுல நான் வந்துட்டேன்னு புரிய வைச்சது... அப்புறம் பர்த்டே அன்னைக்கு கொலுசு கொடுத்தப்போ போட்டுவிடுன்னு சொன்னது, நான் கொடுத்த கிஸ்-அ அக்செப்ட் பண்ணினது எல்லாம் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு... அந்த தைரியத்துல தான் உங்கிட்ட இன்னைக்கு காதலை எப்படி சொல்லலாம்னு யோசிட்டிருந்தேன்... அப்ப தான் தூக்கம் வராம, பெட் ல நான் படுத்திருந்தேன்... மேடம் என் பக்கத்துல வந்து... என்று அவன் சொல்லவிடாது அவன் இதழ் மீது கரம் வைத்து தடுத்தாள் அவள்...அவன் அவள் கரம் மீது முத்தமிட அவன் சட்டென்று கை உருவிக்கொண்டாள்...

அவன் மெய்மறந்து சிரிக்க, அவள் அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்...

பகல் பொழுதில் அவனிடமிருந்து தப்பித்தவள், இரவில், அவனுக்கு முன்பு அறைக்கு சென்று உறங்குவதை போல் நடித்தாள்...

உள்ளே வந்து, அவளின் செயலைக்கண்டு புன்னகைத்தவாறு நின்றவன், ஸ்வரா, உன் பக்கத்துல பல்லிடா.... எனவும் அவள் துள்ளிகொண்டு எழுந்தாள்...

ஹாஹாஹா... உன் நடிப்பெல்லாம், பல்லியாலே போச்சு... ஹாஹாஹா... என்று அவன் சிரிக்க, உங்களை... என்றவள் அவன் மார் மீது தன் பிஞ்சு கரம் கொண்டு குத்த, அவன் அவள் கரம் பிடித்து இழுக்க, அவள் அவன் மேல் சரிந்தாள்...

பூப்போல் தன் மேல் கிடந்தவளை, அள்ளி அணைத்துக்கொண்டான்... ஆசை தீர.....

தன் நெஞ்சுக்குள் புதையுண்டவளை முகம் நிமிர்த்தியவன், அவள் நடுக்கம் உணர்ந்து அவள் பயம் போக்க, ஹ்ம்ம்... இப்போ கூட நீ கிஸ் தரமாட்டல்லடா... டேய்... சுதா... உன் நிலைமை ரொம்ப பாவம் தாண்டா.. உனக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா?... அய்யோ... என்று அவன் நொந்து கொள்ள, அவள் கோபம் மிக, அன்ஷு???... என்றபடி அவனை திட்ட, அவன் அவள் திட்டி முடிக்கும் வரை காத்திருந்தான்... அவள் திட்டி முடித்து சிரித்துக்கொண்டிருந்தாள் அழகாக... அந்த சிரிப்பு அவனை தூண்ட, அவன் ஸ்வரா.... என்றபடி.... அவள் இதழோடு இதழ் சேர்த்தான்...

முதல் முத்தத்தில் மொத்தமாய் அவன் வசமானாள் அவள்... வெட்கம் ஒரு பக்கம் படை எடுத்து சூழ, விழி மூடி அவன் முத்தத்தைப் பெற்றுக்கொண்டாள்...

மெல்ல அவளை விடுவித்தவன், அவள் நாணம் கொண்டு நிற்பதை பார்த்தவுடன் அழகாக சிரித்தான்... அந்த மயக்கும் புன்னகையில் மயங்கியவள், அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் அவனே எதிர்பாராத நேரத்தில்... அவள் முத்தமிட்டதும், அவன் வேட்கையுடன் அவளை ஆரத்தழுவினான்... ஆன்ந்தத்தில் அவள் கண்கள் நீர் கொண்டதும், அவன் அதை மென்மையாக துடைத்துவிட்டு அவளை மார்போடு சேர்த்தணைத்து ஸ்வரா, நீ அழவேக்கூடாது இனி... என்றவன், வாழும் காலம் வரை என் கண்களில் இந்த பாவையின் முகம் தெரிய வேண்டும்... அப்படி இல்லை எனில், என் உயிர் நின்ற.... என்று முடிக்கும் முன்பே அவள் அவனை சொல்ல விடாது தடுத்தாள்... இனி அப்படி சொன்னீங்க அடிதான்... என்றவள், லூசு அன்ஷூ... என்றபடி அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்...

“கன்னத்தில் முத்தமிட்டால்...

உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி....

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா...

உன்மத்தம் ஆகுதடி....

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா...

என் உயிர் நின்றதன்றோ....”

This is entry #42 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.