ஏமாற்றமாய் இருந்தது அவளுக்கு, உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் தேவையானவற்றை வாங்கி கொள்ளுங்கள் என்று பெரிய மனதுடன் பெரியவர்கள் இவர்களுக்கு தனிமை கொடுத்து பிற உறவுகளுக்கு துணி எடுக்க சென்று விட அவன் இவள் முகத்தை கூட பார்க்கவில்லை ..
அவளுக்கோ இவனின் பாரா முகத்திற்கு காரணம் விளங்கவில்லை ..
ஏன் இத்தனை கோபம் இவருக்கு ...? வந்ததிலிருந்து முகமே சரியில்லையே ..? என்னிடம் கூட இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை என்று ஏங்கி, இந்த நிற புடவை பிடித்திருக்கிறதா.? என்று கேட்க அவன் மௌனத்தையும் பாரா முகத்தை மட்டுமே பதிலாய் கொடுத்திருந்தான் ..
பேதை மனம் தவித்திருக்க, மன்னவன் அவன் பாராதிருக்க வந்தது திருமண நாள்.
இரவே அவள் சென்றிருப்பாள் என்று எண்ணி, ஐயோ மணப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்க
என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தான் அவன், ஆம் சொல்லியிருக்கிறாள் சிவகாமி தன் உயிர் தோழி என்று சொல்லியிருக்கிறாள் தான் ஆனால் அவளை சிவா என்று தான் அழைப்பாள் என்பதை சொல்லவில்லையே ..!
அன்று பேசிய வார்த்தைகள் ஒரு பெண் பெண்ணிடம் பேசியவை.யா ..? இப்போது யோசித்தான் பாரதிராஜன்.