அன்று நான் தயங்கியதற்கு காரணம் தானே இதோ வருகிறேன் என்று உள்ளே சென்றவள் ஒரு தங்க சங்கிலியோடு வந்தாள் அதில் பிரியா பாரதி என்று பெயர் பதித்திருந்தது ...உங்கள் பிறந்த நாளுக்கு என இதை பரிசளிக்க நான் கடைக்கு சென்றிருந்தேன் ..உங்களுக்கு இன்ப அதிர்ச்சி பரிசை கொடுக்க ஆசைப்பட்டேன் இப்போது வெட்க படுகிறேன் இப்படி ஒருவரை நான் மணம் முடித்ததற்கு என்று சொல்லி அவன் முகத்தில் அதை வீசி எறிய புரியாமல் குழம்பினான் பாரதிராஜன் ...அவன் சற்றே தடுமாறினாலும் பின் அன்று தான் கண்டது..?
மாப்பிள்ளை தயவு செய்து அவளை குறை சொல்லாதீங்க அவள் மீது எந்த குற்றமும் இல்லை என்று அவளின் தாயார் கூற, இப்போது தன் மாமியாரை சினங்கொண்டு பார்த்தான் பாரதி ..பின் நான் சொல்வது பொய்யோ ..? என்றான் ..
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் மௌனமாய் நின்று இருந்தார் கமலத்தின் கணவர் ...
இந்த ரகசியம் தெரிந்த மூன்றே பேர் நான், என் கணவர், அவரின் நண்பர் பார்த்தசாரதி அவர் மூலமே எனக்கு உங்கள் சம்பந்தம் கிடைத்தது. பிரியாவின் தந்தை இறந்த போது கூட என் மகளை காணும் சாக்கில் தான் சென்று என் கணவரின் முகத்தை இறுதியாக கண்டு வந்தேன்.