(Reading time: 24 - 48 minutes)

நிலா அண்ணீ...' என்றனர் இருவரும் கோரஸாய்.

நானா டா இங்க உட்கார்ந்துகிட்டு கதையளக்கறேன். என்னை அங்க வரவிடாம தடுக்கறது யாரு? சும்மா உங்க அண்ணனை வாய்க்கு வந்ததையேல்லாம் பேசவேனாம்னு சொல்லு சந்து!

அய்யோ அண்ணீ.. அவரை எப்படி சமாளிக்கனும்னு எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே நீங்க தான்... நீங்களே இப்படி... என்னமா இப்படி பண்றீங்களேமா?' என்று கலாய்க்க அங்கே சிரிப்பலை எழும்ப நம்ம வெட்டி வீராசாமி மட்டும் முறுக்கிகொண்டு இருந்தார்.

சரி எல்லாரும் எழுந்து சாப்பிட வாங்க' என்று அழைத்து சென்று அவளே பரிமாரினாள்.

ஆராதனாவுக்கும் ப்ரீத்தீக்கும் பெருத்த சந்தேகம்...மெல்ல விஷ்வாவின் காதை கடித்தாள் ப்ரீத்தீ.

விஷ்வா... நீலா மேடம் உங்க ரிலேடிவா? அண்ணீனு வேற கூப்பிடறீங்க?

ஆமாம்... அவங்க என் அண்னன் மனைவி..... ப்ரபு அண்ணவோட பேட்டர் ஆஃவ்.

என்னது??' என்று விழிகளை விரித்தனர் இருவரும்.

எப்போ கல்யாணம் செய்தாங்க ரெண்டு பேரும்?? ரெண்டு பேருமே ஸ்டில் திருமணமாகாதவங்கனு தானே தெரியும். ரிக்கார்ட்ஸ் கூட அப்படி தானே இருக்கு.. 

இப்போ எதுக்கு அது எல்லாம்... வா சீக்கிரம் வா... அண்ணீ சமையல் சூப்பரா இருக்கும்.. எத்தனை வருஷத்துக்கு அப்புறம் சாப்பிட போறேன்... நீங்க ரெண்டு பேரும் வரலைனா போங்க...' என்று விரைந்து சென்று சாப்பிட அமர்ந்துவிட்டான் சந்தோஷ்.

அம்மா தாயிங்களா... எனக்கும் விஷ்வாவுக்கும் கல்யாணம் நடக்கனும்னா... நீங்க ரெண்டு பேரும் அண்ணீயை இம்பரஸ் செய்து கவர் செய்யறதுல தான் இருக்கு! அதுக்கு தான் உங்களை இங்க கூட்டிவந்ததே! தயவு செய்து சோதப்பாதீங்க மா!' என்ற சஞ்சுவும் சென்று அமர்ந்துவிட்டான்.

எல்லோரும் அமர்ந்து சாப்பிட அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள் நீலாம்பரி.

போங்க அண்ணீ... இந்த சாப்பாட்டை... இந்த ரூசியை எல்லாம் எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா? - சந்து.

அதுவரை பேசவா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த ஆராதனா 'அக்கா... எப்படி உங்க பிஸி டைம்ல இவ்வளவு ரூசியா சமைக்கறீங்க?' என்றாள்.

என்னது அக்காவா???' என்றாள் ப்ரீத்தீ.

புன்னகைத்தவாறே 'இன்னும் கொஞ்ச நாளில் நீங்களும் தெரிஞ்சிப்பீங்க.. உங்க ஆத்துக்காரருக்கு சமைக்கனும்னா தானா எல்லாம் வந்திடும்' என்றாள் நீலா.

நிலா அண்ணீ... நீங்க அங்கேயே வந்திடுங்களேன்... - சஞ்சுவும் விஷ்வாவும். அதற்கு அவள் ப்ரபுவை பார்க்க அவனோ அவளை முறைத்துவிட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான்.

உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? - ப்ரீத்தீ.

14 யிர்ஸ் ஆச்சா அத்தான்?? - நீலாம்பரி

'ஆங்... முப்பது வருஷம் ஆச்சு' என்றான் ப்ரபு.

என்னது?? - என்றனர் ஆராதனாவும் ப்ரீத்தியும்.

இல்ல இன்னையோட 15 வருஷம் ஆச்சு.. - தம்பிகள் இருவரும். 'வாவ்... சூப்பர்.. மேடம்... கங்க்ராட்ஸ் சார்' என்றனர் பெண்கள் இருவரும்.

ஏன் உங்களுக்கு கல்யாணம் ஆனதை வெளியில சொல்லவேயில்ல... நீங்க மேரீட்னு யாருக்குமே வெளியில தெரியாதா??? ஏன் மறைக்கனும்??

இப்போ சொல்லாததற்கு சில காரணங்கள் இருக்கு...அண்ணன் பிஸ்னஸ் மேன்... அண்ணீ ஐ ஏ ஸ்... அதுவும் முக்கியமான டிப்பார்ட்மண்ட் செக்ரடரி... நிறைய சொஷியல் அண்ட் போலிட்டிகல் இஷ்யூஸ் இருக்கு... அவங்க கல்யாணம் செய்த போதே வெளியில சொல்லியிருந்தா... எங்க மொத்த குடும்பத்தையும் கம்பி எண்ண வெச்சிருப்பாங்க.. ஏன்னா... அண்ணாவுக்கு 20 வயசு... அண்ணிக்கு 17 வயசு...எங்களுக்கும் நிலாவுக்கும் ஒரே பாட்டி தாத்தாதான்.....எங்க தாய்மாமா பொண்ணு தான் நிலா.. என்னைவிட இரண்டு வயசு பெரியவ... அப்போ தாத்தா ரொம்பவும் படுத்தபடுக்கையா இருந்தாங்க... அவரோட கடைசி ஆசையா பேத்தி கல்யாணத்தையோ பேரன் கல்யாணத்தையோ பார்க்கனும்னு...' - சஞ்சு

அதனால பேத்திக்கும் பேரனுக்கும் கல்யாணமா... அதுவும் மைனர் மேரேஜ்! - ப்ரீத்தீ

உங்க தாத்தா தான் இன்னும் இருக்காரே சஞ்ஜய்?!' - ஆராதனா

அதுதான் காலத்தின் கொடுமையே!' - என்றான் அதுவரை அமைதியாய் இருந்த ப்ரபு.

சரி... நீங்க பேசிட்டு இருங்க உங்களுக்கு ஏதாவது குடிக்க எடுத்துட்டு வரேன்...'என்று நீலா எழுந்து செல்ல..

உங்க அண்ணன் ஏன் இப்படி பேசறாரு சஞ்ஜய்... பாருங்க அவங்க முகம் எப்படி வாடிடுச்சு...' என்று ஆராதனா முணுமுணுக்க...

யாரு... அண்ணியா??? அவங்க இப்போ சம்ம கோபத்துல இருக்காங்க... இப்போ பாரு அண்ணன் அவங்க பின்னாலேயே எழுந்து போவாரு..' என்று சஞ்ஜய் சொல்லும் போதே ப்ரபு எழுந்து சென்றான்.

சமையலறை வாசலில் இருந்து அவளை பார்த்திருந்தவன்... ஹ..ம்ம்ம்ம். என்று கனைக்க தரும்பி அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு திருப்பிக்கொண்டாள் நீலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.