(Reading time: 24 - 48 minutes)

ன் அவர் ஆசைக்கு என்ன?? அதனால தான் தம்பிங்க காதலிக்கற ஆராதனாவையும் ப்ரீத்தீயையும் நீ பார்க்கனும்னு அழச்சிட்டு வந்தேன்... அம்மாவுக்கு நீ பார்த்து சின்ன மருமகள்களை ஓகே செய்தா போதுமாம்.... அப்பா என்னைக்கும் உனக்கும் அம்மாவுக்கும் ஜால்ரா தான்... தாத்தாவும் பாட்டியும் கேட்கவே வேணாம்... தம்பிகளையும்.. தங்கை சித்ராவை பத்தியும் உனக்கு தான் தெரியுமே... உன் கால்லை சுத்திவரும் பப்பீஸ்...அடியேன் உன் அடிமை... 

ஆமாம்...ஆமாம்... நீங்க அடிமை தான்..நம்பிட்டோம்...

என்ன சொல்ற?? ஆராதனாவயும் ப்ரீத்தியையும் பத்தி??

நான் சொல்ல என்ன இருக்கு அத்தான்?? தம்பிங்க காதலிக்கறாங்க... அவங்க காதலை சேர்த்து வைக்க வேண்டியது நம்ம கடமை.. நாமும் காதல் கல்யாணம் செய்தவங்க... அது நியாபகம் இருக்கட்டும். ரெண்டு பேருமே நல்ல பொண்ணுங்க தான்... என்ன ப்ரீத்தீ கொஞ்சம் வாயாடி... ஆனா சந்துவுக்கு ஏத்த ஜோடிதான்... உங்களுக்கு அவங்களை பிடிச்சிருக்குனு எனக்கு தெரியும்... ப்ரீத்தியை சஞ்சு பிஏ வாக அப்பாயிண்ட் செய்தப்பவே தெரியும்.. அதுவும் இல்லாம நம்ம இன்குபேஷன்ஸ் கம்பனியில ஆராவை உட்கார வெச்சிருக்கீங்க.... உங்களுக்கு பிடிக்கும் போது எனக்கு பிடிக்காம இருக்குமா?? உங்களை இங்க டின்னருக்கு வர சொன்னப்பவே தெரிஞ்சிருக்கனுமே.. அடுத்த முஹுர்ததிலேயே இவங்க கல்யாணத்தை வெச்சிடலாம் அத்தான்...

ஹே...ஹே,... சக்சஸ்... நிலா அண்ணீ... தேங்க் யூ.....சோ மச்..' என்று ஆர்பரித்து வந்து அவர்களை கட்டிக்கொண்டனர் அதுவரை மறைந்திருந்து இவர்கள் பேசுவதை கேட்டிருந்த சஞ்சுவும் சந்துவும்.

அவங்க ஓகே சொல்லுவாங்கனு எனக்கு தெரியும்... நான் அக்கானு கூப்பிட்டப்போ அமைதியா சிரிச்சுட்டே இருந்தாங்களே.. - ஆராதனா

எனக்கும் தெரியும்...உங்க ஆத்துக்காரருக்கு சமைக்கனும்னா தானா எல்லாம் வந்திடும்னு சொன்னாங்களே.. அப்போவே தெரியும்.. - ப்ரீத்தீ

லவ் யூ அண்ணா.. லவ் யூ அண்ணீ..' என்று இரண்டு ஜோடிகளும் காலில் விழ அவர்களை தடுத்து கட்டிக்கொண்டனர்.

புது இரு ஜோடிகளும் அணைத்துக்கொள்ள ப்ரபு கண்களில் பொறாமை...

ஆனா இது தாத்தா ஆசைக்காகனு செய்யறதுனு...' என்று நிலா இழுக்க

ஏன் அவர் ஆசைக்கு என்ன??? அதுக்கு வழிசெய்ய தான் தம்பிகளுக்கு கல்யாணம்னு...இங்க தான் எதுவுமே இல்லையே... இப்படி கட்டிபிடிக்கவே 15 வருஷமாயிக்கு...ஹம்ம்ம்... என்ன செய்ய...

.....

டேய் ப்ரபு உன் நிலைமை ரொம்ப பாவம் டா.. பாரு எனக்கு சின்னவனுங்க சஞ்சுவும் சந்துவும்... கண்முன்னேயே என்னமா ரோமான்ஸ் செய்யறாங்க...

உங்களை யாரு செய்ய வேணாம்னு சொன்னது... - என்றது அவனின் நிலாபொண்ணு

ஏய்ய்.. நிலாபொண்ணு...' அவன் அணைப்பு இன்னும் இறுகியது.

அண்ணா... நாங்களும் இங்கதான் இருக்கோம்...

உங்களை யாருடா இங்க வர சொன்னது... நாங்க பேசினதை ஒட்டு கேட்டதும் இல்லாம இப்போ நந்தி மாதிரி குறுக்கே நின்னுக்கிட்டு...

சரி... சரி... நாங்க போறோம்... எங்களுக்கு என்ன வேலையா இல்ல... இல்ல 15 வருஷம் வேஸ்ட் செய்ய நாங்க என்ன லூசா???

டேய்ய்ய்...

சும்மா மிரட்டாதீங்க அண்ணா... வெளியில என்னதான் மிரட்டி உருட்டினாலும் வீட்டம்மாகிட்ட எலிதானே நீங்க!

அக்கா மட்டும் என்னவாம்?? மினிஸ்டரில ஒரு டிபார்ட்மேண்டே இவங்களை பார்த்து அலறுது... புலியை பார்த்தா மாதிரி மிரளறாங்க... இங்க மாமாகிட்ட பயந்து நடுங்கறாங்க...

ஏன்னா... இது என்னோட நிலாபொண்ணு... அஞ்சு வயசுல நான் பார்த்த எனக்கே எனக்கான நிலா...' என்று காதல் மனைவியை அணைத்துக்கொண்டான் ப்ரபு.

என்னதான் வெளியில... வேலையில கணவன் மனைவி இருவரும் டெரர் பார்டியாய் இருந்தாலும் அதையே குடும்பத்திலும் காட்டினால் இது வண்டலூர் ஜூவாய் தான் இருக்கும்... தன்னிலையை ஒதுக்கி அன்பு காட்டினால் மட்டுமே இது இல்லறமாய் வீடாய் இருக்கும் சஞ்சு' என்றாள் நிலா என்றழைக்கப்படும் நீலாம்பரி.

அவன் நினைத்தையே அவளும் சொல்ல... ஆசையும் காதலுமாய் தன் நிலாபொண்ணை இறுக அணைத்துக்கொண்டான் ப்ரபு. 

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!

This is entry #32 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.