(Reading time: 16 - 32 minutes)

அவள் மனதை அறிந்தேன்..!! - சித்ரா வெ

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Avalin manam arinthen

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்பமுடியவில்லை.... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயத்திருந்தார்கள்...

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...

ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவருடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது.... அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.... அது அவளே தான்...!!!

னால் அதை பார்த்த பிரசாத்திற்கு கோபம் வரவில்லை... இந்த காலக்கட்டத்தில் இதெல்லாம் பெரிய விஷயமில்லை.. அது யாராவது நண்பனாகவோ... இல்லை உறவினராகவோ இருக்கலாம்...

ஆனால் கயலின் சோர்வான முகமும்... அவள் கையில் இருந்த ட்ராவல் பேகும் தான் பிரசாத்திற்கு உறுத்தியது,

அதற்குள் தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து அந்த பைக் கிளம்பியது... இவனும் அந்த பைக்கை பின் தொடர்ந்தான்...இவன் ஹெல்மட் அணிந்திருந்ததால் கயல்விழியால் இவனை பார்க்க முடியாது.

அவனுடைய பைக் அவர்கள் செல்லும் பைக்கை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் அவனுடைய நினைவெல்லாம் அவளை பெண் பார்க்கச் சென்ற நாளை நினைத்துக் கொண்டிருந்தது.

இப்போது திருமணமே வேண்டாம் என்றிருந்தவனை கட்டாயப்படுத்தி தான் பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் அவன் பெற்றோர்கள்... அவர்கள் விருப்பதிற்காக பெண்ணை பார்ப்பதும்... பிறகு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் அவர்களுடன் சென்றான்.

ஆனால் கயல்விழியை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது, அவளுக்கு கயல்விழி என்று யார் பெயர் வைத்ததோ... அவள் கண்களை பார்த்து கொண்டே இருக்கலாம்... மணந்தால் இவளை மட்டும்தான் மணக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.

இவன் பெற்றோர் அவளுடன் தனியாகப் பேச சந்தர்ப்பம் கொடுத்த போது கூட ... அவன் வேறொன்று நினைத்து கொண்டு வந்ததையும்... இப்போது இவளை பிடித்துவிட்டதையும் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அவளுடன் பேச சென்றான்.

ஆனால் அங்கு நடந்தது வேறு... அவள் தான் பேசினாள்... "எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை... என்னோட அம்மா அப்பா.. நான் சொன்னா கேக்க மாட்டாங்க... அதனால நீங்களே என்னை பிடிக்கலன்னு சொல்லிடுங்க..." என்று அவள் சொன்னதும் அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்...

அவனுக்கு கயலை மிகவும் பிடித்துவிட்டது... இது அவள் அழகை பார்த்து மட்டுமல்ல... அவளை பார்த்ததும் அவனுக்கு  அவளுடன் இணையும் இந்த பந்தம் இந்த ஜென்மம் மட்டுமல்ல... ஏழேழு ஜென்மமாக தொடர்ந்து கொண்டிருப்பது போல் தோன்றியது... அவளை பிடிக்கவில்லை என்று எளிதாக சொல்லிடமுடியுமா...???

மௌனராகம் படத்தில் தான் நினைத்ததை ரேவதி சொன்னதும் உடனே எனக்கு விருப்பம் என்று மோகன் சொல்லிவிட்டு வந்தாரே... அதே போல் இவனும் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளின் முறைப்பை பரிசாக வாங்கி கொண்டான்.

கயலின் பெற்றோரும் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் என்று சொன்னார்கள், அவள் அமைதியாக நின்றிருந்தாள், ஏற்கனவே எல்லா விஷயமும் பெரியவர்கள் பேசியதால்.. இவர்களின் சம்மதம் கிடைத்ததும்... நிச்சயத்திற்கு தேதி குறித்துவிட்டார்கள்.

அன்று பெண் பார்க்கச் சென்ற போது... இவன் தங்கையிடம் இவன் அலைபேசி எண்ணை வாங்கி.... இவனுடன் கயல்விழி பேசினாள்.

அவளே இவனுடன் பேசுகிறாளே... என்று இவனால் சந்தோஷப்பட முடியவில்லை... ஏனென்றால் ஃபோனில் இவனுடன் பேசிய விஷயம் அன்று சொன்னதுதான்... "ஏன் நான் அவ்வளவு சொல்லியும்... என்னப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க... இப்பக் கூட டைம் இருக்கு... என்னப் பிடிக்கலைன்னு சொல்லி நிச்சயத்தை நிறுத்திடுங்க..." என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள்.

இரண்டாவது முறையும் ஃபோன் செய்து அதே விஷயத்தை பேசினாள், ஒன்றுக்கு இரண்டு முறை ஃபோனில் அதே விஷயத்தை கூறவும் இவனுக்கே சந்தேகம் வந்து விட்டது... ஒருவேளை அவள் யாரையாவது காதலிக்கிறாளோ என்று... இவன் அதை அவளிடமே கேட்டுவிட்டான்... ஆனால் அதற்கும் அவளிடம் கோபமாக பதில் வந்தது...

"ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால்... அதற்கு காரணம் காதலாக தான் இருக்க வேண்டுமா...??" என்று அவள் கூறியதும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.