(Reading time: 9 - 17 minutes)

டுத்தநாள் அவ நேரா வருண்கிட்ட வந்தா, "ஆல் தி பெஸ்ட். நல்லா வெளாடு" னு சொல்லிட்டு போய்ட்டா.

இவனுக்கு ஒன்னுமே புரியல. "கனவா இது. அவ என்கிட்ட தான் பேசுனாளா? அவளுக்கு நான் தான்னு தெரிஞ்சுருச்சா?"னு என் உயிர வாங்கிட்டான்.

அன்றைக்கு மேட்ச்ல, வருணுக்கு புது தெம்பு வந்துருச்சு. காட்டெரும மாதிரி திமிரிக்கிட்டுல ரைடு போனான். ரெண்டு சைடுலயும் ரெண்டு பேர் அவன புடுச்சு அமுக்க, அவங்கள அப்டியே  அசால்ட்டா தூக்கி, சிரிச்சுட்டே கபாடி பாடிட்டு வந்து கோட்ட மிதிச்சான். கோச்சே மெரண்டு போய் பாத்தாரு.

மேட்ச் முடிஞ்சதும், நித்யஶ்ரீ அவன்கிட்ட வந்து கை குடுத்து "நல்லா வெளாண்டீங்க, நான் ஆடியன்ஸா உக்காந்து பாத்துட்டு இருந்தேன். சூப்பர்" என்றாள்.

இவனுக்கு பேச்சே வரல. தெனறித் தெனறி "தாங்க்ஸ். நீ மேட்ச் ஆடலயா?" என்றான்.

"இல்ல. நான் ரிஜிட்டரே பண்ணல. உங்கள பாக்கத்தான் வந்தேன்."

அவன் வெக்கப்பட்டு கையால முகத்த மறச்சு, அங்கிட்டும், இங்கிட்டும் பாத்து சிரிச்சுட்டே, "தாங்க்ஸ்" சொன்னான். வருண் வெட்கப்படுறது எனக்கு ரொம்ப புடிக்கும். கட்டிபுடிச்சு முத்தம் குடுக்கலாம்னு தோணும். அவ்ளோ அழகா இருப்பான்.

அவளும் அவன பாத்து சிரிச்சுகிட்டே, "ரொம்ப வெக்கப்படாதீங்க" என்றாள்.

"நான்தான்னு உனக்கு எப்டி தெரியும்"

"கடைசியா நீங்க சைக்கிள்ல பேப்பர் வைக்கும் போது பாத்துட்டேன். ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் ஈவென்ட்லயும் நான் உங்கள பாத்துருக்கேன். நீங்க ரைடு போறத பாத்து நான் ரசிப்பேன். ஆனா அப்போ உங்க பேரு, நீங்க எந்த காலேஜ் எதுவும் தெரியாது."

அதுக்கப்பறம் அவங்க,ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் போறேன்னு பொய் சொல்லி, அடிக்கடி மீட் பண்ணாங்க. நான் மொதல்ல இவன் இதெல்லாம் சும்மா வெளயாட்டா தான் பண்றான்னு நெனச்சேன். ஆனா, அவள எவ்ளோ லவ் பண்றான்னு என்ட சொல்லும் போது தான் எனக்கே புரிஞ்சது.

ரு நாள் வருண், நித்யஸ்ரீய அவனோட யமஹா ஆர், எக்ஸ். 1௦௦ பைக்ல அழகர் கோவில்க்கு கூட்டிட்டு போனான். திரும்பி வர்ற வழில ஆக்சிடென்ட் ஆய்ருச்சு. நித்யஸ்ரீக்கு கைல சின்ன சிராய்ப்பு தான். துடிச்சு போய்ட்டான். அவ கைல ரெத்தத பாத்ததும், இவனால அழுகைய அடக்க முடியல. அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், டீ. டீ  இன்ஜெக்ஷனும், கட்டும் போட்டு, அவள அவங்க ஏரியால விட்டுட்டு, “உங்க வீட்ல வெளாடும் போது கீழ விழுந்து அடி பட்டுருச்சுனு சொல்லி சமாளிச்சுரு”னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள்ள இவன் நடந்து வரும் போது தான் எனக்கு தெரிஞ்சது, இவனுக்கு பயங்கரமா அடி பட்டுருக்குனு. கணுக்கால் பெசங்கிருச்சு. முட்டி எலும்பு கீழ எரங்கிருச்சு. அவனோட அப்பாவும் அவனும் புத்தூர்க்கு போய் அவனுக்கு கட்டு போட்டு வந்தாங்க. ஒரு மாசம் கழிச்சு தான் இந்த விஷயம் நித்யஸ்ரீக்கே தெரிஞ்சது. “அவளுக்கு அடி பட்டு ரெத்தம் வரும் போது, எனக்கு வலிக்கவே இல்ல. அவள பாத்துக்கணும் பாத்துக்கனும்னு தான் மனசு துடிச்சது” னு என்கிட்ட பொலம்புனான்..

அந்த ஆறு மாசம் நானும் நித்யஸ்ரீயும் தான் அவனோட உலகமே. எங்க ரெண்டு பேத்துகிட்டயும் தான் மாத்தி மாத்தி பேசுவான். பல சண்டைக்கு அப்பறம், நாளைக்கு அவங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம். மனசு சந்தோசமா இருக்கு.

எப்டியும் நான் கல்யாணத்துக்கு போகமாட்டேன். என்னால போக முடியாது. கல்யாணம் முடிச்சு நைட் இங்க தான வரணும்னு வருணோட ரூம்லேயே காத்துருக்கேன்.

ஒரு நாள் முழுக்க அவனுக்காக, அவனோட ரூம்லேயே காத்துருக்கேன்.. நான் எதிர்பாத்த நேரமும் வந்திருச்சு, வருண் கல்யாணம் பண்ணிட்டு, முதலிரவுக்காக அவனோட ரூமுக்கு வந்தான். என்ன பாக்கவே இல்ல. எப்டி பாப்பான். நான் தான் மறஞ்சு நிக்குறேனே. வருண் என்கிட்டே பேசணும்னு தான் நான் அவன் ரூம்ல இருக்கேன். வேற எந்த காம இட்சைகாகவோ, இல்ல வருண் எனக்கு மட்டும் தான்னு உரிமைலயோ இல்ல.

கொஞ்ச நேரத்துல அவளும் வந்தா. கொஞ்சமா நகை போட்டு, அழகா இருந்தா. அவ தலைய பாத்ததும் எனக்கு பத்திட்டு வந்தது. அவ்ளோ கோவம். ஆனாலும் என்னால ஒன்னும் பண்ண முடியல.

அதுக்கு அப்பறம் நடந்தத நான் பாக்க விரும்பல. காலைல வருண் என்கிட்டே வந்தான். “ஹாய் சசி. சாரிடா. கல்யாண டென்ஷன் ல உன்கிட்ட நான் சரியாவே பேசல. நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்னு தெரியும். இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். (என்கிட்டே வந்து, மெதுவா) நேத்து எனக்கும் நித்யஸ்ரீக்கும் பர்ஸ்ட் நைட்.”

நித்யஸ்ரீ இவன் பேச்சு சத்தம் கேட்டு, “யாரோட பேசிட்டு இருக்க வருண்.”

வருண் திடுக்கிட்டு போய், கட்டில் கிட்ட வந்து, நித்யஸ்ரீ கண்ண பாத்து, “என்ன மன்னிச்சுரு, நித்யஸ்ரீ. வெளி உலகத்துக்கு தெரியாம எனக்கு ஒரு தொடர்பு இருக்கு.” என்றான்.

“டேய். என்னடா சொல்ற? நான் ஏமாந்துடேனா. யாருடா அது?” என்றாள்.

“வா உனக்கு அறிமுகப்படுத்துறேன். இவ தான் சசி. நான் வச்ச பேரு.” என்று நித்யஸ்ரீக்கு காட்டினான்.

“டேய். இது என்னோட ஹேர் பின். இது கூடவா பேசிட்டு இருந்த?” என்றாள்.

“ஆமா, நீ டீ டீ வெளாடும் போது, உன்னோhட ஹேர் பின் என்னோட மொகத்துல பட்டது. அப்போ தான் நான் உன்ன மொத தடவ பாத்தேன். அதுல இருந்து சசி எப்பயுமே என்னோட தான் இருக்கா.”

This is entry #66 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.