நடுவில் அந்த பலகை இருந்தது. மேகனும் ஆர்வமாகவே இருந்தான். சந்துரு முழு ஈடுபாடுடன் வழிமுறைகளை சொல்லி கொண்டிருந்தான். நாம் பேய்களை அழைக்கும் போது குறிப்பிட்ட பெயரை தான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அலைந்து திரியும் ஆத்மாக்கள் அத்துமீறி விளையாடும் என்று எச்சரித்தான். இன்னும் நிறைய வழிமுறைகள்.
மணி 12 ஆனவுடன், கைகளை இருக்க பற்றி கொண்டு அவன் ஏதேதோ சொல்ல, சற்று நேரத்தில் சூழல் மாறுவதை அனைவரும் உணர்ந்தனர். ப்ரியனுக்கு அது பிடிக்கவில்லை. எதையோ அது அவனுக்கு அறிவுறுத்தியது.
"இப்போ யாரா கூப்பிடலாம்?" -சந்துரு
"தெரியலையே" - மேகன்
" யாரையாவது கூப்பிடலாம்" - விஷ்ணு
"ஒரு ஐடியா இருக்கு, நம்ம பேர்ல பொண்ணு பேர் இருந்த எப்படி இருக்கும்? அதை எல்லாம் கூப்பிடலாமா? - இளமாறன்
" நல்ல ஐடியா" - சந்துரு
இப்படி தான் அந்த விளையாட்டு ஆரம்பம் ஆனது. ப்ரியன் மட்டும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
மேகவதி,சந்திரா, இளவரசி, வைஷ்ணவி என அவர்கள் ஏதேதோ பெயர்கள் சொல்லி அழைத்து ஏதேதோ பேச, ப்ரியனுக்கு தலை வலித்தது. ஒரு புறம் பயம் அதிகரித்தது. இவர்கள் செய்த விளையாட்டால் வரம்பு மீறி ஏதேதோ நடக்கும் தருவாயில் ப்ரியன் மனதில் அந்த பெயர் எழுந்தது.
"ப்ரியா..!!!"
அவன் சொல்லி முடித்து நிமிர பால்கனி தடுப்பு சுவர் மேல் ஒரு பெண் போன்ற உருவம் வந்து அமர்வதை பார்த்தான். அதற்குள்ளாக மெழுகுவர்த்திகள் அணைய, சந்துரு
"இது சரியாய் வரலை நம்ம சொதப்பிடோம் ச்ச" என்று ஒரு சாமியாரிடம் இருந்து வாங்கி வந்திருந்த எலுமிச்சம் பழங்களை உருட்டிவிட்டு, விபூதியை காற்றில் ஊதினான். சற்று நேரத்தில் நிலைமை கைக்குள் வந்தது. அந்த பலகையை எரித்து விட்டு, அனைவரும் உள்ளே செல்ல, ப்ரியன் தான் கடைசியில் சென்றான்.
அவன் மனது திரும்ப சொல்லி உத்தரவிட, மூளை எச்சரிக்கை விடுத்தது. முயன்றும் முடியாமல் மெல்ல திரும்பினான். அந்த உருவம் இவனை நோக்கி கைகளை உயர்த்தி 'வா' என்பது போல் அசைத்தது. சட்டென்று உள்ளே சென்று விட்டான். அன்றிலிருந்து தான் இதெல்லாம்.
இன்று ஒரு முடிவுக்கு வந்தவன்,சந்துருவை அழைத்தான். அன்று மாலை வந்த சந்துரு, அவன் கூறியது அனைத்தையும் கேட்டு விட்டு சிரிக்க தான் செய்தான். இன்றிரவு அவனுடன் தங்குவதாக சொன்னான்.
" எந்த பேயானாலும் என்னோட டூயட் பாட்டும் டா, பால்கனி கதவை திறந்தே வை" என சிரித்து கொண்டே சொல்லியவனை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
அன்றிரவு மதுவின் உதவியுடன் சந்துரு உறங்கி கொண்டிருக்க, மணி பன்னிரண்டை நெருங்குகையில் ப்ரியனிடம் அசைவு.. சரியாக பன்னிரண்டு அடிக்க, எழுந்து கொண்டான். திறந்திருந்த பால்கனி கதவு அவனுக்கு தோதாய் போனது.
தடுப்பு சுவர் மேல் இருந்த அந்த பெண்ணின் உருவம் மங்கலாய் தெரிய அருகில் சென்று இவனும் சுவர் மீது ஏறி அமர்ந்தான்.
"வா ப்ரியன் என்னை கூப்பிட்ட தானே, நான் ப்ரியா கூப்பிடறேன் வந்துடு"
"வா வா வந்துடு"
அவன் கையை பிடித்து கொண்டு அது கூப்பிட, கொஞ்ச கொஞ்சமாய் பால்கனியின் மறுபுறம் காற்றில் சரிய தொடங்கினான் ப்ரியன். மேலே பறக்க தொடங்கியது அந்த உருவம்.
"அம்ம்மாஆஆஆஆஅ" என்ற அலறலில் விழித்து எழுந்த சந்துரு விரைந்து பால்கனிக்கு சென்று கீழே பார்க்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான் ப்ரியன்!!!!
அதிர்ச்சியில் உறைந்தான் சந்துரு!!!
முற்றும்...
தான் எழுதிய கதையின் கடைசி அத்தியாயத்தை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தான் சந்துரு. ப்ரியனின் புகைப்படம் அவன் மேஜை மீது சிரித்து கொண்டிருக்க அன்று அவன் சொல்லிய போது சிரித்ததற்காக இன்று கண்ணீர் வடித்தான். அழுது கொண்டே தூங்கி போனவன். சட்டென்று முழிப்பு வர, மணியை பார்த்தான், 12!!
ப்ரியன் இறந்த அன்றிலிருந்து இது தான் அவனுக்கு நடக்கிறது, பயந்து போயிருந்தான் சந்துரு.தப்பி தவறி கூட பால்கனி பக்கம் பார்க்க கூடாதென முடிவு செய்து அவன் முயன்று கொண்டிருக்க, காற்றில் இவன் கதை எழுதிய காகிதங்கள் பறந்து பால்கனி கதவருகே விழுந்தன.
அதை எடுத்து கொண்டு நிமிர்ந்து பார்க்கையில் கை கட்டி சிரித்தபடி,
"சந்துரு வாடா" என்று அழைத்தான் ப்ரியன்.
பயத்தின் நக்கு ஒட்டி கொள்ள, அவன் நகர முற்படுகையில்,
"விடு ப்ரியன் அவனே வருவான் பாரு" ஒரு பெண்ணின் குரல். இவன் எட்டி பார்க்க, பால்கனி தடுப்பு சுவர் மீது அந்த பெண்ணுருவம். வெலவெலத்து போய் சந்துரு அதிர்ந்து நிற்கையில் சட்டென்று அவன் மனம் கட்டளை இட்டது.
'போ'
அவர்கள் அழைத்தார்கள்.
"வாடா மச்சான்"
"வா சந்துரு எங்களோட சேர்ந்துரு"அவன் கையில் இருந்து தாள்கள் நழுவியது. மெல்ல நடந்து கைப்பிடி சுவர் அருகில் வந்தான் சந்துரு.
மெல்ல நகர்ந்து தடுப்பு சுவரின் மேல் ஏறி நின்றான் சந்துரு. இரு புறமும் ப்ரியாவும் ப்ரியனும் இருக்க,மெல்ல காற்றில் அந்தரத்தில் பறக்க தொடங்கி இருந்தான் சந்துரு!!!
ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்துருவின் பிணத்தை நோக்கி ஓடி வந்தான் அந்த அப்பார்ட்மண்டின் செக்யூரிட்டி!!!!
This is entry #82 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}