(Reading time: 22 - 44 minutes)

கீர்த்தனாவிற்கு  ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது... லட்சுமி பாட்டியின் பெயரில் இருந்த முழுப்பணத்தையும் அவருக்கு தெரியாமல் எடுத்த பின்னர் அவரின் மகனுக்கு பாட்டி செல்லாகாசாக ஆகியதால் இவரை வந்து பார்க்கவில்லை என்பது..

ஏனோ அவளுக்கு சாப்பாடு உள்ளே இறங்கவில்லை... கஷ்டப்பட்டு தண்ணீருடன் உணவை விழுங்கினாள்.

கீர்த்தனா பாட்டியை அவரின் இருப்பிடம் கேட்டு அவரை அங்கேயே  சென்று இறக்கிவிட்டாள். அவளுக்கு பாட்டியுடன் அவரின் வீடுக்கு செல்ல நினைத்தாள். ஆனால் லட்சுமி பாட்டி எப்படி எடுத்துக் கொள்வார் என தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

“வீடுக்கு வர்றியா பாப்பா?”

அவரின் கண்ணில் தெரிந்த எதிர்பார்ப்பு கீர்த்தனாவிற்கு சந்தோஷமாக இருந்தது. வேகமாக காரை விட்டு இறங்கினாள்.

அடுக்குமாடியில் இரண்டாம் தலத்தில் பாட்டியின் வீடு.. அவர் மாடிப்படி வழியே செல்லுவதை பார்த்து

“ஏன் பாட்டி அதுதான் லிப்ட் இருக்கே... ஏன் படி ஏறி போறிங்க?”

“எனக்கு முன்னெல்லாம் கண்ணு சரியாத தெரியாது, மேல போக எங்க தட்டனும் தெரியாது. யாரவது தமிழ் பேச தெரிந்தவர்கள் வர வரைக்கும் கீழேயே நிற்ப்பேன்.. எவ்வளவு நேரம் நிற்கறது... காலு ரெண்டும் வலி எடுத்திடும்.. அதுக்கு அப்பறம் ஏறி இறங்குறது எல்லாம் படியில் தான்.. முடிந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கல” என்றார்..

கீர்த்தனாவிற்கு பாட்டியின் மகன் மேல் சொல்ல முடியாத அளவிற்கு கோபம் வந்தது. பெற்றவளை கடைசி காலத்தில் பார்க்க முடியாதா  அவனால்..? அப்படி என்ன அவனுக்கு சுயநலம், அவரின் உழைப்பில் கிடைத்த முழு பணத்தையும் கொள்ளை அடித்து, இவரை தேவை இல்லாத சக்கை போல் விசி சென்று விட்டான்..

“கோவத்தில் இருந்தவளை என்ன பாப்பா வெளியே நிற்கர.. உள்ளே வாம்மா..” அன்புடன் அழைத்தார் அந்த பாட்டி.

பல மாதமாய் பேச்சி துணை இன்றி இருந்தவரிடம் கீர்த்தனா அன்போடு பேசவும் அவருக்கு பிடித்து இருந்தது. குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்குமே தேவை அன்பு.. யார் என்று தெரியாத பெண் அவளிடம் அன்புடன் பேசி உண்ண உணவு வாங்கி கொடுத்தவளை பார்த்தவருக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அவரின் மகன் கூட இவ்வளவு பொறுமையாய் அன்புடன் பேசியது இல்லை.. எப்போவாவது வருபவன் சில நிமிடங்களிலே அங்கு இருந்து கிளம்பிவிடுவான். அவரால் முன்பு போல் ஓடியாடி வீட்டு வேலை செய்ய முடியவில்லை.. தட்டுத்தடுமாறித்தான் அவர் சமையலை செய்து சாப்பிட வேண்டும்

என்றாவது வரும் மகனிடம் இதை  பல முறை சொல்ல அவனோ உங்களுக்கு கண் அப்ரேஷன் செய்தால் சரியாகிவிடும் சொல்லிவிட்டு சென்று விடுவான்.. பாவம் அந்த முதியவரின் மனதில் மகனுடன் சென்று அவனுடன் இருக்க ஆசை.

மகனோ அவரை உடன் அழைத்து செல்லுவதையே தவிர்த்து வந்தான்... கையில் இருந்த பணம் அனைத்தும் முடிந்து விட, இனி வங்கியில் சென்று பணம் எடுத்தால் தான் அவர் காய் கறி வாங்கி சமைக்க முடியும்..

வீட்டில் இருந்த புத்தகத்தை எடுத்துகொண்டு சென்றவருக்கு கீர்த்தனா வரும் வரையில் பணம் கையில் கிடைக்கவில்லை.. பாவம் அவர் அறியவில்லை கீர்த்தனா தன் சொந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள் என்பதை..

அவள் அவருடன் பேச்சு கொடுத்தாள்..  அவரை  பற்றி சொல்லி முடித்தவர் கடைசியில், " காலையில் இருந்து ஏதும் சாப்பிடல  பாப்பா... நீ மட்டும் வரவில்லை என்றால் நான் என்ன பண்ணி இருப்பேன் தெரியல" என்றார் ..  பாவமாக அவர் சொல்ல கீர்த்தனாவிற்கோ  அவரின் நிலை கண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வைத்தது..

“பாட்டி நீங்க கண்ணு அப்ரேஷன் செய்தப்போ எவ்வளவு பணம் கட்ட வேண்டும்ன்னு ஒரு லெட்டெர் குடுத்து இருப்பாங்களே .. அதை நீங்க வைத்து இருக்கீங்களா?”

“கொஞ்சம் இரு பாப்பா நான் எடுத்து வரேன்” ஒரு ரூம்மில் சென்று சில காகிதங்களை எடுத்து வந்தார்

அதை வாங்கி பார்த்தவளுக்கு தான் அதிர்ச்சி!!  ஏனெனில் மருத்துவமனையில் ஐநூறு கட்ட பில் குடுத்து உள்ளனர்.. ஆனால் பாட்டியின் மகனோ அவரின் சேமிப்பில் இருந்து எழுபதாயிரத்தை எடுத்துவிட்டான். 

கனத்த மனதுடன் கீர்த்தனா அங்கு இருந்து கிளம்பினாள். அவளுக்கு அந்த பாட்டியை அப்படியே விட்டு செல்ல மனம் இல்லாமல் அவளின் தந்தைக்கு அழைத்து உதவி நாடினாள் .

ரு வாரம் கடந்த நிலையில் கீர்த்தனா அந்த பாட்டியை தேடி அவரின் வீடுக்கு சென்றாள்..

அழைப்பு மணியை தட்டி காத்து இருந்தளின் இதயம் பந்தய குதிரையை போல் துடித்தது.

இந்த ஒரு வாரத்தில் லட்சுமி பாட்டிக்கு எதாவது நேர்ந்து இருந்தாள் நினைக்கவே அவளின் மனம் பதறியது... அப்படி ஏதும் இல்லை என்பது போல் சற்று நேரத்தில் கதவு திறக்கப் பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.