நானா அதைப் பத்தி பேசினா… ஒரு வேளை என் வேலைய நினச்சே அவ்ளவு அப்செட்டா நீ இருக்க…..உன் அப்பா அண்ணா விஷயமே உனக்கு தெரியாம இருக்க….. நான் வந்து விளக்கம் சொல்றேன்னு இன்னுமாய் உன் நிம்மதிய கொன்னுடக் கூடாதேன்னு தவிச்சுட்டேன்…
அப்பதான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்…. இங்க உன்னை அந்த விமலோட பார்க்கவும் தான் எனக்கு விஷயமே புரிஞ்சுது….. உன் அப்பா அண்ணா மாதிரி ஹை எண்ட் கவர்மென்ட் சீக்ரெட்டை கடத்துறவங்களலாம்…. அரெஃஸ்ட் செய்து….விசாரிச்சு பனிஷ் செய்றதுக்குள்ள பாதி ஜனதொகை கூட காலி ஆகிறுக்கும்…. அதனால சீக்ரெட் என் கவ்ன்டர் செய்துறுப்பாங்கன்னு புரிஞ்சுது…. விமல் செக்க்ஷனோட வேலை அது….
அதுவும் அவனுக்குன்னு ஒரு ஸ்டைல் உண்டு….என் ரிப்போர்ட்ல நீ இன்னொசெண்ட்னு தெளிவா குடுத்துருந்தேன்….. ஆக உன்னை அவன் காப்பாத்தினாலும்…. உன் அப்பா அண்ணா டெத்ல சந்தேகம் இருக்குன்னு நீ கேஸ் பைல் செய்து….அது தேவை இல்லாம உன் அப்பா கூட காண்டாக்ட்ல இருக்ற மத்த டெரிஸ்ட்டை அலர்ட் செய்துடக் கூடாதுன்னு
விமல் என்கவ்ண்டர் செய்துட்டு….நீ தான் மர்டர் செய்த மாதிரி செட் செய்துறுப்பான்னு புரிஞ்சிது…. அது அவன் வே ஆஃப் ஹேண்ட்லிங்…..
பட்…..நீ ரொம்ப அப்செட்னதும் அப்பப்ப உன் கூட டச்ல இருந்திருப்பான்….அந்த கேஃஸ் அவன் கண்ட்ரோல்ல இருக்கு உனக்கு ஒரு ஆபத்தும் வராதுன்னு எதாவது சொல்லிட்டு இருந்திருப்பான் மனசு கேட்காம….
நேத்து அவன் கூட உன்னை பார்க்கவுமே விஷயம் எனக்கு புரிஞ்சிட்டு…..
ஆனா இதெல்லாம் சொன்னா நீ ஒத்துப்பியா…ஏன்னா என்னால எந்த எவிடென்ஃஸும் இதுக்கு காமிக்க முடியாது….. இல்லை நீ மர்டர் செய்தது எனக்கு தெரிய வர்றப்ப நான் விட்டுட்டுப் போய்டுவனோன்னு பயந்துட்டு இருக்ற இப்போதைய மனநிலை இன்னும் மோசமாகி எனக்கு விஷயம் வேற தெரிஞ்சிட்டுன்னு இன்னும் மோசமா ரியாக்ட் செய்வியோன்னு ஒரே டென்ஷன்….
அதுல இன்னைக்கு இன்சிடென்ட் வேற ஒரு வகையில இந்த பீரியட்ல எக்ஃஸ்பெக்டெட்…. அதுக்காகதான் என்னை இந்த ஏரியவை மானிடர் செய்ய இங்க அனுப்பி இருந்தாங்க டேம் மெயின்டனென்ஸ் எம்ளாயி போஸ்ட் கொடுத்து…
என்னமோ இன்னைக்கு காலைல ரொம்பவே மனசுக்கு நல்லா இல்லை…”
இவன் விளக்க
“காலைல நீங்க கிளம்பின விதத்துல தான் நான் ஆடிப் போய்ட்டேன்….. என்ன ஆனாலும் உங்களால என்னை விட்டு கொடுக்க முடியாதுன்னு தோணிச்சு…அது வரைக்கும் விஷயம் தெரியவும் என்னை விட்றுவீங்கன்னு பயம்….நீங்க எனக்கு நிலைக்க மாட்டிங்கன்னு….”
அதற்கு மேல் பேச முடியாமல்…. அவன் மார்பில் புதைந்தவள்…
மீண்டுமாய் தலை தூக்கி “ நீங்க கிளம்பி வந்த விதம் மனச பிசஞ்சுகிட்டே இருந்துச்சு….. உங்கள பார்த்தாலாவது மனசுக்கு நல்லாருக்கும்னு சைட்டுக்கு வந்தேன்… “ இவள் வருகைக்கு விளக்கம் சொன்னாள்.
“இப்ப பார்த்தல்ல உன் அப்பா விஷயத்துல கண்டிப்பா நீ எதுவும் செய்திருக்க மாட்ட….ஸ்டில் நான் இன்னைக்கு செய்ததுக்கும் உன் அப்பா விஷயத்தில் நடந்துக்கும் என்ன வித்யாசம் சொல்லு?”
அவன் அணைப்பை விலக்காமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இருக்கு சமர்….நீங்க அதுக்குன்னு அதிகாரம் கொடுக்கப் பட்டவங்க அதோட நான் ஒரு கிரிமனலோட பொண்ணு…” கடைசி வார்த்தையில் அவள் உடைய….
“முதல்ல சொன்னியே அது சரி…..எல்லோரும் சட்டத்தை கைல எடுக்க கூடாது…பட் உன் விஷயத்துல விமல் தான் எல்லாம் செய்ததே…..ஆனா அடுத்து சொன்னியே அது தப்பு….. என் வாழ்க்கைன்றது நீயும் நானுமான உலகம்…..அது மாதிரிதான் உன் வாழ்க்கையும்…..என்னையும் உன்னையும் தவிர எல்லோரும் அடுத்தவங்கதான் அங்க…..உன் அப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன்….”
அவன் உணர்ந்து சொல்லிக் கொண்டிருக்க…..
இப்போது இன்னும் பரிதாபமாய் இவள் முகம் போக…. சற்றே நெற்றி சுருக்கி….நகம் கடித்து…. ஆனால் அவன் அணைப்பிற்குள் அப்படியே நின்று கொண்டு….
“அப்ப நம்ம பாப்பா…?” என பாவம் போல கேட்டாள் இவள். “அந்த குட்டி யார் உலகம்?”
“ஹேய்…” என செய்தியின் இனிமையை, ஆச்சர்யத்தை உள்வாங்கியவன்….”இது எப்போ?...” என திக்குமுக்காடி பின்
“அந்த குட்டியும்…இந்த பாப்பாவும் இனி என் உலகம்…” இவள் நெற்றி முட்டி….அங்கு இதழ் பதித்தான்… அடுத்து வரவிருக்கும் அவன் குழந்தைக்கு….
இப்போது யாரிவன் வந்தது எதற்காக என புரிந்திருந்தாள் அவள்.
இவளவன் இவளை உலகமாய் கொள்ள வந்தவன்…!!!!!
Friends யாரிவனோ?? வந்தது எதற்காக ?? என்ற சிறுகதைக்கு தொடர்ச்சியாக எழுதப்பட்ட கதை இது. முடிந்தவரை இதை தனி கதையாக விளங்க வைக்க முயன்றிருக்கிறேன்…. இருந்தும் இதில் ஏதாவது புரியாதிருந்தால் அந்தக் கதையையும் வாசித்துப் பார்க்கவும். நன்றி
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.