சவால்கள் ரசிக்கவில்லை
வெற்றிகள் ருசிக்கவில்லை
அவளின்றி ஓர் அணுவும் அசையவில்லை
அவளைப் பிரிந்து என் வாழ்வில்லை (56)
அங்கு ஆதவன் மறையாதோ
அந்தி பொழுதும் வாராதோ
வெள்ளி நிலா காயாதோ
வாடைக் காற்றும் வீசாதோ(57)
குருவிகள் கூட்டிற்குத் திரும்பாதோ
குடும்பத்தோடு குலாவி மகிழாதோ
உன் பிரிவின் துன்பம் எனை வாட்டுகிறதே
உனக்கும் தானே வேதனை! எனக்கது புரியாதோ(58)
பிரிவாற்றாமையில் பசலை நோய் கொண்டு
புலம்பும் தலைவியின் நிலை தான் இன்று
தன்னிலை தாளாமல் துவண்டாள்
தருமோ இயற்கை ஆறுதல் என தவித்தாள் (59)
மென்சாரல் மேனியை தீண்ட
மறைவாய் ஒதுங்கினாள்(60)
மண் வாசனை நாசியில் நுழைய
முகம் சுளித்து வெறுத்தாள்(61)
மழைச்சாரல் கீதம் இசைக்க
மறுத்து கரத்தால் செவி அடைத்தாள்(62)
என் முகிலன்
காதல் மழையில் நனைந்தவள்
காற்றில் அவன் (சு)வாசம் நுகர்ந்தவள்
கம்பீர குரலில் மயக்கம் கொண்டவள்(63)
வான்முகிலே!!!
அன்று பூமியின் மகளாய்
உனை அள்ளி அணைத்தேன்
இன்று முகிலன் மனையாளாய்
அவனிடம் தஞ்சம் கொள்ள துடிக்கிறேன் (64)
உரக்க உரைத்ததை உணரவில்லை
உரியவன் அதைக் கேட்டு
உயிர்த்தெழுந்ததை அறியவில்லை(65)
இரு கரம் அணைக்க
இவள் கனவோ என திகைக்க
இதழியற்றிய காவியம்
இது நிஜமென செய்தது சத்தியம்(66)
வா என்ற ஓர் அழைப்பில்
வந்திருப்பேனடா என அவளும்
சதியின் சொல்லே சரியென உணர்ந்து
சரணடைந்து விட்டான் அவனும்(67)
வண்ணங்கள் வேறு வேறு
வானவில் ஒன்று
எண்ணங்கள் வேறு வேறு
இதயம் ஒன்று (68)
பிரிவென்ற அச்சம் வேண்டாம்
ஈர்க்கும் விசை இணைக்கும் பசை
காதலிருக்க பயமேன் (69)