(Reading time: 25 - 50 minutes)

ங்கயோ பார்த்த மாதிரி இருக்குது…”

“பீர்பல்….” அவன் சொல்லும் போதே இவளுக்கு இவரது பெயின்டிங்கை  பார்த்த நியாபகம் வந்துவிட்டது….

“ஹையோ என் மோஸ்ட் ஃபேவரிட்….அங்க வச்சே சொல்லிருக்கலாமில்ல நான் ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்திருப்பேன்…” இவள்தான்….சும்மானாத்துக்கும் ஒரு ஆதங்கம்….

“அதான் உன் ஆட்டோகிராஃப பீர்பல் தாட்ல போட்டுட்டியே….   காபூல் அரசர் ஒரு குடம் அதிசயம் அனுப்பவும்னு அரசர் அக்பருக்கு ஒரு லெட்டர் அனுப்புவாரு…..அதுக்கு  பீர்பால் குட பூசணி அனுப்பி வைக்க சொல்வார்……அதைப் பார்த்த காபூல் அரசர் இவ்ளவு குறுகுலான வாயுள்ள குடத்துக்குள்ள பூசணிய எப்டி போட முடியும்…..இது அதிசயம்தான்னு ஒத்துபார்னு ஒரு கதை நியாபகம் இருக்கா…..? பீர்பால்க்கு ஐடியா குடுத்துட்டு வந்தே இப்ப நீங்க தான மேடம்…” அவன் வார…

“வாவ் இது சரித்ரா சரித்ரத்துல தடம் பதிச்ச நாள்….” மனசுக்குள் மட்டுமாய் முனங்காமல் இப்போது அவன் முன் வாய்விட்டே சொல்லிக் கொள்ள முடிகிறது அவளால்…..

அடுத்த இரண்டாம் நிமிடம்….கண் மூடி திறக்க….இப்போ இவளோட ஊட்டி….

“அப்போ நான் கிளம்புறேன் சக்கு….” ட்ரைவர் இருக்கையில் இருந்தபடி இப்போது அவன் இவள் புற கதவை திறந்துவிட….

“என்னது சக்குவா…?”

“ஆமா சரக்குன்னு கூப்டா நல்லா இருக்காதுல்ல…..அதான்…..” அவன் சின்ன சிரிப்புடன் சொல்லியபடி இவளைப் பார்க்க….

இவள் புகை வருமளவு கோபத்தில் முறைக்க….

“எப்பவும் சரி சரின்னு சொல்லப் போறேன்…இப்ப மட்டுமாவது சக்குன்னு சொன்னேன்னு இருக்கட்டும்….” சொல்லிவிட்டு கதவை மூடினான்….

இவளுக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும்…..கொஞ்சமே கொஞ்சம் கஷ்டமா இருக்கோ அவன் கிளம்புறான்னு…..

‘இனி எப்ப பார்ப்போம் இவன?’ இவள் சிந்தனை தொடங்கிய நொடி….

“டூ இயர்ஸ்ல பார்ப்போம்….” மறைந்திருந்தது அவன் கார்….

இரண்டு வருடங்களுக்கு பிறகு….

பெர்ஃபெக்ட் அரேஞ்ச்ட் மேரேஜ்…...ஜீவாவுக்கும் சரித்ராவுக்கும் நடந்திருக்க….. திருமண இரவில்…….

 “ அன்னைக்கு முன்ன எதுக்கு டைம் மஷின்ல வந்தீங்கன்னு கேட்டுட்டே இருந்தல்ல…..” ஜீவா ஆரம்பிக்க….

‘ம்…..இன்னைக்கும் எதாவது சொல்லி அதுக்கு பதில் சொல்லாம போவீங்க…..நானும் நம்ம வெட்டிங் ஃபிக்‌ஸானதுல இருந்து  கேட்டுட்டு இருக்கேன்…..நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்….’ பெட் அருகில் நின்றிருந்த சரித்ரா  மனதிற்குள் பொரிந்தாள்……பின்னே அவள்  இந்த விஷயத்தில் கோபமா இருக்கான்னு அவனுக்கு புரியனுமே….

“இல்ல ரித்து குட்டி இன்னைக்கு கண்டிப்பா சொல்வனாம் நான்….” இவள் கை பிடித்து தன் அருகில் அமர வைத்து….இவள் தாடை பிடித்து செல்லம் கொஞ்சிய   அவன் கையை ஒரு தட்டு….

‘ரித்துவா….?அப்ப அந்த சல்வாரும் நான் நினச்ச மாதிரி உங்க வேலை தானா?...’ இவள் மனதிற்குள் அடுத்த அம்பு வித் ஃபயர்….

“ சல்வாரதான நினைக்கிற…..பின்ன….முதல் தடவை பொண்டாட்டிய பார்க்க போறவன் அவளுக்கு எதுவும் கொடுக்காம வந்தா எப்டியாம்…?. ரித்ரான்ற உன் நேம ரித்துவாக்கியாச்சு….” அவன் விளக்க அவனை முறைத்தாள்…..

“நம்ம மேரஜுக்கு பிறகு உள்ள ஃப்யூசர்ல இருந்து தான் அன்னைக்கு அங்க வந்தேன்……அதான் இப்ப நீ சொன்ன பிபிஎஸ் வரை தெரிஞ்சு இருந்துச்சா…. அங்க வந்து எழுதி வச்சு உன்னை குழப்பிட்டேன்…….”

அவன் விளக்க விளக்க இன்னுமாய் உர்ர்ர்ர்ர்ர்ர் என இவள்…..

 “ சரி இப்ப விஷயத்துக்கு வர்றேன்…. நான் ஏன் வந்தேன் தெரியுமா….?”

‘நான் கேட்க மாட்டேன்…’ மனதிற்குள் சொல்லியபடி இவள் காதுகளை மூட…..

“அப்டியே நம்ம வெட்டிங் ப்ரபோசல் உனக்கு வந்த நாளை கொஞ்சம் யோசிச்சுப் பாரு….” அவளை தன் தோளோடு இழுத்து சாய்த்தான்….…அவசரமாய் அவனை பிடித்து தள்ள முயன்றாள் அவள்….

“காத திறந்துட்ட…அப்ப நானே சொல்றேன்….” அவன் சொல்ல மீண்டுமாய் தன் காதுகளை இவள் மூட….

இன்னும் முறைப்பாய் விறைப்பாய் அமர்ந்திருந்தாலும்….அந்த நிகழ்வு அவள் கண்ணில் விரிகிறதுதான்…..

“லேப் டாப்பை மடியில் வைத்து குடைந்து கொண்டிருந்த போது இவளது அம்மாவின் அழைப்பு…

“சரு….நான் சொன்னேன்ல ஒரு இடம்…..” அம்மா ஆரம்பிக்க…

“அம்மா…..” கெஞ்சலாய் வழிந்தது இவள் குரல்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.