(Reading time: 25 - 50 minutes)

லறிய படி திறந்த கதவு வழியே விழுந்தடித்து ஓடுகிறது…..டைம் ட்ராவல் அனுபவத்தில் தாறுமாறாய் மிரண்டிருந்த  டாமர் த டாக்….

இப்போதுதான் விஷயம் சொல்லி விளக்கி முடித்திருந்த ஜீவாவின் வார்த்தைகளில் இவள் அய்யோவிலிருந்து ஆன்….ஆஹான்…ரேஞ்சுக்கு வந்திருக்க….. பின்னே டைம் மிஷினாச்சே…….த டைம் மி…ஷி…ன்….

அப்படியே அசையாமல் நின்றிருந்த நீண்ட கைகால்களை வைத்தும்….. நிமிர்ந்து இவனைப் பார்த்திருந்த அவளது முட்டைக் கண்களை வைத்தும்……. அவள் விஷயத்தை புரிந்து கொண்டாள் என, அவன் இவளை பிடித்திருந்த பிடியை விலக்கிய நேரம்…. டாமர் கதவை தாண்டிப் போய் சற்று தொலைவில் நின்றிருந்தது…….

 இப்போ இவளோட ‘டைம் மிஷினா ஆஹான்’ என்ற மனம்….’ஐயோ மை டாமர்’க்கு தாவி இருந்தது….

நாய பிடிக்கப் போறேன்னு இவளும் எழுந்து ஓடிவிடக் கூடாதென அவசரமாய்  அவன்  இவள் கையைப் பிடிக்க வர…

அவன் கைகளுக்குள் பிடிபடாமல் சட்டென கையை இழுத்துக் கொண்டவள்….. “எங்களுக்கும் காமன்சென்ஸ்லாம் இருக்குது…அப்டி ஒன்னும் ஓடிட மாட்டேன்…..” நொடித்த வார்த்தைகளால் அவனை குத்தி…..

“ஆனா டாமர் இல்லாம இங்க இருந்து வர மாட்டேன்…..” என்று முடித்தாள்.

“சாரிமா…ங்க… கண்டிப்பா….”  சொல்லியபடி  இப்போது காரில் எதோ பட்டன்களை இவன் அப்படியும் இப்படியுமாய் அழுத்த…..

“ஏம்பாங்க….” இவள் அவனைக் கூப்பிட்டாள்…. “இப்டி கூப்டா உங்களுக்கு எப்டிங்க சார் இருக்குது…..? இதுக்கு நீங்க என்னை நீ போன்னே பேசிடுங்க….. பைதவே என் நேம் சரித்ரா…”

அவள் நக்கலாய் தொடங்கிய போது…. சற்று ஒருவிதமாய் பார்க்க ஆரம்பித்தவன் முகத்தில் இப்போது புன்னகை…

”தேங்க்ஸ்.....என் நேம்…” அவன் சொல்லி முடிக்கும் முன்

“ஜீவா…” ஒரு ஃப்ளோவில் சொல்லி இருந்தாள் இவள்…..  இப்போது அவன் பார்வையில் ஒரு மின்னல்…..‘ஐயோ எதுக்குடி இப்ப சொன்ன..?’ அதே நேரம் அவள் மனம் அலற…..

அந்த இவளது சங்கடமும் அவனுக்கு புரிந்ததோ…..இதழில் அடக்கிய புன்னகையுடன் அவன் பார்வையை ஸ்டீரிங் வீலுக்கு திருப்பினான்…..இப்போது கார் சற்று தொலைவு நகர்ந்தது….

“இப்ப நம்ம சுத்தி யாரும் இல்லை…இறங்கி டாமர தேடலாம்….. ஆனா யாரும் பார்க்காத மாதிரி கவனமா இருக்கனும்….” அவன் சொல்ல சரித்ரா சுற்றும் முற்றும் பார்த்தபடி இறங்கிக் கொண்டாள்….

தூரத்தில் பார்வையில் பட்டது டாமர்….. இவள் வேக வேகமாக அதைப் பார்த்து போக….அந்த ஜீவாவும் இவள் பின்னால் வர….

எப்பவும் குட்டி காம்பவ்ண்ட் வாலுக்குள் கட்டிக் கிடந்த டாமர்க்கு இந்த பரந்து விரிந்த தோட்டம் படு குஷியைத் தந்ததா….இல்ல டைம் ட்ராவல்க்கு பயந்து அது தாறுமாறா ஓடிச்சானு தெரியலை…..

இப்போது அது ரெண்டு துள்ளு…..ஒரே ஓட்டம்…. ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஓரு ஓட்டம்….. துரத்தல்னா துரத்தல் அப்படி துரத்தல் இவ….

அதில் டாமர் ஒரு புதர் அருகில் உட்கார்ந்திருந்தவனை தாண்டி ஓடுகிறது….இவள் இடம் பொருள் மறந்து அங்கு ஓட……இவள் பின்னால் வந்த ஜீவா…. “சரித்ரா….அங்க ஆள்….” அவன் சொல்லி முடிக்கும் முன் அந்த நபர் இவளைப் பார்த்துவிட்டார்….

ஆனால் பார்த்தவர் இவர்கள் எதிர் பார்த்தது போல் பெரிதாய் எந்த அதிர்வும் காட்டாமல்…..அவர் செய்து கொண்டிருந்த வேலையை தொடர்ந்தார்….

அதாவது வாய்விட்டு அழுதார்…. நின்றுவிட்டாள் இவள்…. ஜீவாவும் தான்…..

இவர்களது உடை கோலத்துக்கு அவர் இதற்குள் துள்ளிக் குதித்து கூப்பாடு போட்டிருக்க வேண்டும்……ஆனால் அவர் கண்டு கொள்ள கூடாமல் அழுதால்??

அதுவும் அவரது வயது வேறு இவள் மனதை பிசைந்தது…..60பதுகளில் இருப்பாரோ…..உடை அந்த ஜோதா அக்பர் கால உடைதான் எனினும் நைந்த ஒரு கோலம்…அவர் பொருளாதார நிலையை கூற….

“என்ன ஆச்சு தாத்தா…? ஏன் அழுறீங்க….” கேட்டேவிட்டாள் இவள்…

இப்போது திரும்பி ஒரு விதமாக இவளைப் பார்த்தவர் அடுத்தும் ஒன்றும் சொல்லாமல் சோக முகத்தோடு எங்கோ பார்த்தார்…

“அவருக்கு தமிழ் தெரியாதுமா…” ஜீவா காரணம் சொன்னான்…

ஆமான்ன…..டப் செய்து புரிஞ்சுக்க இது என்ன மூவியா?

“தாத்தா க்யூம் ரோனா ஹெய்…?’ இவளுக்கு தெரிந்த ஹிந்தியில் இவள் கேட்க….அந்த பிபிஎஸ் சிரிப்பானோ என ஓடுகிறது உள்ளே உதறல்…. சிரிச்சா சிரிச்சுட்டு போறான்… என மனதை சமாதனப் படுத்தியபடி முக்கால் கண்ணால் தாத்தாவையும் கடைக் கண்ணால் ஜீவாவையும் பார்த்தால்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.