அவன் முழு அக்கறையாய் தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் பதிலுக்காக….
இப்போது தாத்தா ஏதோ நீளமாய் சொல்ல…. எல்லாம் புரியவில்லை எனினும்….அவர் அரண்மனை தோட்டக்காரர்….பூசணி விளைய வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்……தரமில்லை என திருப்பி அனுப்பிவிட்டனர் அங்கே…..அரண்மனை சமையலுக்கு வருவதென்றால் அது சரியாய் உருண்டு திரண்டு பந்து போல பார்வையாய் இருக்க வேண்டுமாம்… இந்த வேலையும் வருவாயும் இவருக்கு வாழ்வாதாரமாம்…என்பது இவளுக்கு புரிந்தது…
இப்போது இவள் அவர் கூடையில் இருந்த பூசணிகளைப் பார்த்தாள்…..இது தரையில் மண்ணில் அமர்ந்து வளந்த விதத்தில் ஒவ்வொன்றும் கொஞ்சம் நெளிந்தாற் போல் இருக்கிறது…
சுர் என கோபம் வருகிறது….”வெட்டி சமைக்க போற காய் என்ன ஷேப்ல இருந்தா என்னவாம்….? யார் இங்க ராஜா..?” இவள் எகிற..
“ஹேய்…காயெல்லாம் ராஜாவா செக் செய்துட்டு இருப்பாருன்னு நினைக்கிற நீ….இது கீழ உள்ளவங்க செய்ற கெடுபிடி…..ராஜாலாம் நல்ல ராஜா தான்….எனக்கு தெரிஞ்சு இப்ப நாம அக்பர் காலத்துல இருக்றோம்னு நினைக்கிறேன்….” ஜீவா விளக்க….
அக்பரா…இவளுக்கு சைடில் கூடுதலாய் ஒரு லைட்…… அவளுக்கு வரலாற்றில் படித்த அக்பர் காலம் பிடிக்கும்……இங்க வர முடிஞ்சா நல்லா இருக்கும்னு நான் எவ்ளவு ஆசப் பட்டிறுப்பேன்….
“அக்பர் அச்சா ராஜா ஹெய்…அவர் சமஜ்சக்தி ஹெய்…” சொல்லிக் கொண்டிருக்கும்போது இவளுக்கே இவள் ஹிந்தியில் சிரிப்பு வருகிறதெனில்….. தாத்தா அருகில் முழங்காலிட்டு அமர்ந்திருந்த இவள் அருகில் சட்டென ஒரு கால் மடக்கி உட்கார்ந்தவன் கண்களால் பேசாதே என்பது போல் ஒரு பதற்றமுடன் சகை செய்தவன்….
“அரசாரோட பேர இப்டி சொல்லக் கூடாதுன்னு எதுவும் இருக்கும்…” என இவளை எச்சரித்தான்….
ஆமான்ன…இவளுக்கு இப்போது இது உறைக்க……அதற்குள் அங்கு வேறு யாரோ வரும் காலடி சத்தம்…
“அடுத்தவங்க யாரும் நம்ம பார்த்துட்டு இப்டி சும்மா கதை பேசிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது…. நீ தாத்தாட்ட அவர் தண்ணி வச்சுறுக்கார் பாரு பானை..அது மாதிரி உருண்டை பானைல… பூசணிகாய் செடியில பிஞ்சா இருகப்பவே விட்டு வைக்க சொல்லு……விளையவும் பானை ஷேப்லயே இருக்கும் காய்…..மண்பானைதான அது….பானைய மட்டும் உடச்சுட்டா… பெர்ஃபெக்ட் ஷேப்ல காய் கிடச்சுடும்னு சொல்லு….. நாம இப்ப கிளம்பியாகனும்…”
சொல்லியபடி கிட்தட்ட இவளுக்கு கவசம் போல் பின்னால் நின்று கொண்டான்…. கழுகின் கண்களை கண்டாள் அவன் பார்வையில்…சுற்றிலும் கண்காணிக்கிறான் அவன்….
அந்த காலடி சத்தததில் அப்படியே எங்கே இவளை இழுத்துக் கொண்டு போய்விடுவானோ என இவள் நினைத்துக் கொண்டிருக்க….அத்தனை சூழலிலும் ஆப்டா அந்த தாத்தாக்கு ஒரு சொலுஷன் சொல்லிட்டு கிளம்புற அவன் தன்மை…..இவளை சேஃப் காட் செய்ய நினைக்கிற அவன் மனம்….
‘கொஞ்சம் குட் பாய்தான் இவன்’ என சொல்ல வைக்கிறது இவளை இவளுக்குள்…
“தாத்தா…இதர் தேக்கோ…..ஏ பானை ஹெய்….” அவர் குடி நீர் வைத்திருந்த பானையை கையில் எடுத்தவள்…..
“கத்து ப்ளான்ட் ஹெய்….” எனும் போது…. இதற்கு மேல் எப்படியும் அவளால் சிரிக்காமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவள்…..இவனைப் பார்க்க……அவனும் சிரிப்பை அடக்க படாதபாடு படுகிறானோ…??!!
முறைப்பும் அதை மீறிய பீரிடும் சிரிப்புமாய் இவள்….…
“நாட் பேட்…குட் ட்ரை….” என இப்போது அவன் வார்த்தை பாராட்டினாலும் அவனும் இவளைப் போலத்தான் சிரித்துக் கொண்டிருந்தான்….
.கூடவே அருகில் இருந்த மரத்தில் குட்டி குட்டி சிவப்பு பழங்களுடன் படர்ந்திருந்த கொடியை எடுத்து இவளிடம் கொடுத்தான்….இவள் ஆக்க்ஷனில் உருண்டை பூசணிக்காயிற்கு சின்சியராய் வழி சொல்லி முடிக்கும் போது….இவளுக்கு எதிரில் வந்து நிற்கிறது அந்த உருவம்…..பல்லக்கில் வந்தவர்…
பக்கென பயந்து போய் இவள் திரும்ப……கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜீவாவைக் காணோம்….
அடப்பாவி மாட்டிப்போம்னதும் விட்டுட்டு ஓடிட்டியா….??!! இவள் நினைத்து முடிக்க கூட இல்லை…..இவள் சட்டென இழுக்கப் படும் உணர்வு….காருக்குள் வந்து பொத்தென அமர்ந்தாள்…..காரை எடுத்துட்டு வந்திருக்கான்…..அது யார் கண்ணுக்கும் தெரியாத மோட்ல இருக்குது கார்…. இவளைப் பிடித்து உள்ளே இழுத்திருந்தான் அவன்….
ஹப்பா என்றிருக்கிறது இவளுக்கு….
இதற்குள் அங்கிருந்த அந்த தாத்தா….அந்த புது மனிதர்….. ரெண்டு பேரும் அதிர்ச்சியாய் இவளைத் தேட….
காரிலேயே சென்று சற்று தொலைவில் நின்ற டாமரை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர் இவர்கள்…..
“கடைசியா வந்தாரே அவர் யாருன்னு தெரிஞ்சுதா…?” ஜீவா கேட்க