அங்கு சென்றதும் வேலையின் காரணமாக தான்யாவிடம் சரியாக பேசமுடியவில்லை. அதோடு அதிகப்படியான அன்பு வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டான்.அக்ஷை தன் பக்கத்தில் இல்லாத காரணத்தாலும் அப்படி இல்லாத நேரத்தில்கூட தன்னோடு நேரத்தை செலவழிக்கவில்லை என்பதை எண்ணி எண்ணி அவள் மனம் தீக்கனலானது. கோபமும் வருத்தமும் கலந்து வார்த்தைகளால் வெலிப்பட்டது.
அடிக்கடி இருவரும் பெரிதாக ஊடல் க்ஒள்ள ஆரம்பித்தனர்.இவர்களைப்போல சண்டைக்காரர்களும் இல்லை. இவர்களைப்போல காதலர்களும் இல்லை என்னும் அளவுக்கு வாழ்ந்தனர். ஆனாலும் சந்தோஷமும் சேர்ந்து வாழ்ந்தே தீரவேண்டும் என்ற மனவுறுதி கொஞ்சமும் குறையவில்லை. மின்னலைப்போல் வரும் ஊடல் மின்னலைப்போல் கானாமல் போய்விடும்.
ஆனால் தான்யாதான் எதையோ இழந்ததைப்போல இருந்தாள். அக்ஷை பழைய மாதிரி அவளிடம் அன்பு பாராட்டவில்லை. என்று நினைத்தாள். ஒரு காலத்தில் அவள் அவனை உதாசீனபடுத்தியதற்காக பழி வாங்குவதாக எண்ணி மனம் நொந்தாள். வார்த்தைகளால் வெடித்து சிதறுவாள்.
ஆனால் அக்ஷை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான். சண்டை போடும்போது சண்டை மற்றபடி அவள் பேசுவதை ஒரு குழந்தை கத்துவதுபோல எண்ணி காதில் வாங்கிக்கொள்ளமாட்டான். அதுவும் தான்யாவை பாதிக்கவே செய்தது.
தன் மனதை எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்று நிறைய அன்பு குறும்செய்திகல் அனுப்புவாள். குறிப்பாக அவர்கலின் கடந்தகாலத்தில் அக்ஷை உபயோகப்படுத்திய அன்பு வார்த்தைகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் ஞாபகப்படுத்துவாள். ஆனால் அதுவும் அவளுக்கு கைக்குடுக்கவில்லை.
அக்ஷையிடம் அவள் சண்டைப்போடும் நேரங்களில் நெருப்பில் இருப்பதுபோல் துடித்தாள். தொடர்ந்து கால்கள் குறும்செய்திகள் அனுப்பி அன்புத்தொல்லை கொடுப்பாள். தான்யா சந்தோஷமாக இருக்கும் தருணங்களைவிட சண்டைப்போடும்போதுதான் அக்ஷையை அதிகமாக நினைப்பாள். அவளின் ஒவ்வொரு சண்டையும் ஒவ்வொரு காதல் கணைகள்.
அக்ஷையும் அப்படித்தான் உணர்ந்தான். தான்யா நான் உன்மேல் எவ்வளவோ அன்பு வைத்திருக்கிறேன் நீ ஏனடி புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். நீ என்னோடு சண்டைப்போடும்போது யார் தோளிலாவது சாய்ந்து அழவேண்டும் ப்ஓல இருக்குடி என்பான். தான்யா உருகிப்போவாள். அவளுக்கு தன் கணவன் அவளை திட்டினாலோ அவள் பேசுவதை கண்டுகொள்ளாதது போல இருந்தால் கோபம் வரும். புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தப்படுவாள். ஆனால் உனக்கும் உன் அன்புக்கும் நான் தகுதியானவன் அல்ல என்று தாழ்வாக பேசினால் வருத்தப்படுவாள். இதயத்தை யாரோ உடைப்பதுபோல நினைப்பாள். தன் குழந்தையின் ஏக்கமாக அவன் பேசுவதை நினைத்துக்கொள்வாள். அவனே அவளுக்கு தகுதி இல்லையென்றால் வேறு யார் அவளுக்கு தகுதியாக முடியும்?
தான்யாவிற்கு தன் கணவன் யார்கிட்டையும் பேசக்கூடாது என்பதில்லை. ஆனால் அவளிடம் பேசவேண்டும். தினசரி ஒருமணி நேரமோ இரண்டுமணிநேரமோ அவளுக்காக செலவழிக்க வேண்டும். அரைமணிநேரமே ஆனாலும் அவள் இதயத்திற்கு நெருக்கமாக பேசவேண்டும். இதுமட்டும்தான் அவள் அக்ஷையிடமிருந்து எதிர்பார்ப்பது. ஆனால் இதை அவளால் அக்ஷைக்கு புரீயவைக்க முடியவில்லை.
என்னதான் நிறைய ஊடல்கள் இருந்தாலும் அவர்கலிடத்தில் அன்பும் நம்பிக்கையும் சிறிதும் குறையவில்லை. குறிப்பாக அக்ஷைக்கு தான்யாவின்மேல்.
ஒருமுறை தான்யாவிற்கு மீண்டும் ஒரு தனியார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது வேலைக்காக. நல்ல வேலை நல்ல சம்பளம். ஆனால் அந்த அலுவலகத்தில் அவளின் முன்னால் காதலன் வேலை செய்வதாக தெரிந்தது. இதைப்பற்றி அக்ஷையிடம் சொன்னபோது அவன் சொன்னான்.
இதுனால உனக்கு என்னடா பிரச்சனை? உன் வேலைய நீ பாக்கப்போற அவ்வளவுதானே? நீ அவனிடம் பேசினால் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் எனக்கு உன்மேல் உன் அன்பின்மேல் நம்பிக்கை இருக்கிறது. மனைவி என்று நான் போட்டிருக்கும் அன்பு வேலியை உன்னால் தாண்டமுடியாது. என்னை போலவே நீயும் என்னை நேசிக்கிறாய் பிறகு யாரால் நம்மை என்னடா செய்யமுடியும்? நீ தாராளமாக போகலாம்.
அக்ஷை எனக்கு உங்களை இப்பவே பார்க்கனும்போல இருக்கு i love you அக்ஷை.
i to love you டா செல்லம். கொஞ்சம் பொறுத்துக்கோ நான் சீக்கிரம் என் செல்லம்கிட்ட வந்துவிடுவேன் டா. நிம்மதியா இருமா.
தான்யாவும் அக்ஷையும் காதலிக்கும்போதும் தீவிரம்தான் சண்டைபோடும்போதும் தீவிரம்தான். அக்ஷை தன் பக்கத்தில் இல்லாததாலும் அந்த நேரத்தில்கூட அவள் இதயத்திற்கு பக்கத்தில் அவன் இருப்பதில்லை என்பதும் சிலசமையங்களில் தான்யாவிற்கு வேறுவிதமான உணர்ச்சியை தூண்டிவிட்டது. அவளின் கடந்தகால வாழ்க்கை எங்கோ ஒரு ஓரத்தில் தன் கணவனை பாதிக்கிறதோ என்று நினைத்தாள்.
தான்யாவிற்கு தன் அக்ஷை கணவன் மட்டுமல்ல ஒரு டைரி. அவள் இதயத்தில் நினைப்பதையெல்லாம் அவனிடம் கொட்டித்தீர்த்தால்தான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். கோபமோ காதலோ வருத்தமோ சந்தேகமோ எதுவாக இருந்தாலும் அக்ஷையிடம் வெலிப்படுத்தினால்தான் அவளுக்கு உறக்கம்வரும். இதயம் ஒருநிலையில் இருக்கும்.