(Reading time: 34 - 67 minutes)

வன் அவள் பதிலைக்கூட எதிர்பாராமல் காலை கட் செய்தான். தான்யாவிற்கு உயிரோடு இறப்பதுப்போலே தோன்றியது. தன்னால் இயன்றவரை அழுதுவிட்டு தன் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். நான் போகிறேன் அக்ஷை  என்று அவனை அழைத்து சொன்னாள். ஆனால் அவனோ சரி என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

வீட்டிற்கு சென்ற அவளுக்கு பசி தூக்கம் பிடிக்கவில்லை. எதுவும் செய்ய தோன்றவில்லை. இடைவிடாது அழுதுகொண்டிருந்தாள். தன் ஆறுயிர் கணவன் அவளை நிராகரித்ததை எண்ணி எண்ணி அவள் மனம் குமுரினாள். இருந்தாலும் அவனை எப்படியும் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கால்களையும் குறும் செய்திகளையும் அனுப்பினாள். ஆனால் அவன் எதற்கும் பதிலளிக்கவில்லை.

ஒரு மாதம் அவளுக்கு நரகமாக இருந்தது. அவள் தன் வேதனைகளை தினமும் தெய்வத்திடம் முறையிடுவாள். ஒருநாள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தன் அறைக்கு சென்றவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அக்‌ஷை தன் கட்டிலில் அமர்ந்திருந்தான். அவள் அவனை நெருங்கி அவனை அனைத்து கதறி அழுதாள்.

தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க அக்‌ஷை. இனி நான் இப்படி செய்யமாட்டேன். என் தவறை உணர்ந்துகொண்டேன். உங்கள பிரிஞ்சி இனி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்கமுடியாது. என்னை தனியேவிடாதீங்க அக்‌ஷை. i love you akshai.

 அக்‌ஷையும் அவளை காதலுடன் அனைத்துக்கொண்டான். உன்னைவிட்டுட்டு நான் எங்கேடா போகப்போறேன்?  i to love you டா செல்லம். நான் உன்னை என்ன்னிடமிருந்து விலக்கவோ வெறுக்கவோ இப்படி செய்யவில்லை. நீ உன் தவறை உணர வேண்டும். இனி ஒருந்ஆளும் இப்படி செய்யக்கூடாது. அதுக்காகத்தாண்டா. உன் உயிர் உனக்கு சொந்தமில்லை. உனக்குள் இருப்பது நான் அப்படி இருக்கும்போது நீ இப்படி செய்யலாமா? உனக்காகவே இருக்க என்னை ஏமாத்திவிட்டு போகலாமா? எனக்கு நீதாண்டா எல்லாம். என் தான்யா இல்லாம என் வாழ்க்கை முழுமை அடையாதுடா. இனி இப்படி பன்னாதடா please.

sorry akshai i am extremely sorry. இனிமே என்னிக்கும் இப்படி செய்யமாட்டேன். உங்களை நிறைய கஷ்டப்படுத்திட்டேன் அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. இனிமே உங்களுக்காகவே வாழ்வேன். ஒருநாளும் பிரியமாட்டேன். சண்டைப்போடமாட்டேன் அக்‌ஷை.

இனி நமக்குள்ள சண்டை வராதுடா. நாந்தான் உன் பக்கத்துலயே இருக்கப்போறேனே?

நிஜமாவா அக்‌ஷை?

ஆமாம்டா பயணம்,  வேலை வெற்றிகரமா முடிஞ்சிடிச்சிடா.

ஹைய்யா சந்தோஷமா இருக்கு அக்‌ஷை. நீங்க என் செல்லம். நீங்க என் பக்கத்துல இல்லாததாலதானே இவ்ளோ பிரச்சனை. இனிமே எல்லாம் ஓகேதான்.

அவன் அவளை அணைத்து நெற்றியில் இதழ்பதித்துவிட்டு பேசினான். பாருமா, நான் உன்னிடம் சரியாக பேசாமல் இருந்ததற்கு மூன்று காரணம் இருக்கிறது. அதை நீ முதலில் புரிந்துகொள். 1 வேலை, நேரமின்மை. 2 பொறுப்புணர்வு.

அதாவது உன் காதலனாக இருந்தபோது உன் அன்பை வெல்ல இதயத்தின் காயத்தை ஆற்ற அன்பு வழியை கையாண்டேன். விலையாட்டில் வெற்றிகொள்ள சில யுக்திகளை கையாளுவதுபோல. வெற்றிபெற்றபின் அந்த வெற்றியை தக்கவைக்க சில பொறுப்புகள் வேண்டும். நம் வருங்காலத்திற்காக சம்பாதிக்க சேமிக்க நம்மை ஒழுங்காக வழிநடத்த. இது ஒரு கணவனின் முக்கிய கடமை. அதனால்தான் சில அன்பு வார்த்தைகளை விலக்கிவைத்தேன்.

3 நீ உன் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். உனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் உன் வாழ்வில் நீ பேரும் புகழும் அடைய வேண்டும். நீ எனக்கான பட்டம்டா உன்ன்னை மேலே பறக்கவைத்து அழகு பார்க்க வேண்டும். அதுக்கு காதல் மட்டும் போதாது கொஞ்சம் கண்டிப்பும் தேவை.

தான்யா அக்‌ஷையின் தோளில் சாய்ந்தபடியே சொன்னாள். அக்‌ஷை உங்களுக்கு ஏன் அக்‌ஷைனு பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

உங்களின் ஆன்மா சாகாவரம் பெற்றது. உங்கள் காதல் அழிக்கமுடியாதது. உங்கள் அன்பு மாறாதது முடிவில்லாதது என்றும் தொடர்வது. அக்‌ஷை, you are immortal indestructable and everlasting.

எனக்கு ஏன் தான்யா என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா? தான்யா என்றால் அதிஷ்டம். உங்களைப்போல அன்பும் நம்பிக்கையும் மிகுந்த கணவர் கிடைக்க நான் குடுத்துவைத்திருக்கிறேன். நான் அதிஷ்டசாலி அக்‌ஷை. அதனால்தான் இந்த அர்த்தங்கள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்க மற்ற கணவன் மனைவியர்போல் செல்லப்பெயர் வைத்துக்கொள்ளவில்லை.

அவன் அவள் கூந்தலை வருடியபடியே என் கன்மணியே இனி நம் வாழ்வில் என்றும் வசந்தகாலம்தான். நம் கஷ்டமெல்லாம் முடிஞ்சிடுச்சிடா. இனி நீ எப்பவும் அழக்கூடாது. நீ அழறது எனக்கு புடிக்கலடா. என்னை திட்டு கோபப்படு பேசாமல்கூட கொஞ்சநேரம் இரு. ஆனால் அழாதேடா. உன்னை சிரிச்சமுகத்தோடவே பார்த்துட்டு அழுது பார்க்க கஷ்டமா இருக்குமா.

அக்‌ஷை, நம் வீட்டிற்கு போகலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.