(Reading time: 17 - 34 minutes)

வன் இலகுவாக கூற, அவளுக்கு அவனது அழைப்பும், அந்த அக்கறையும் பிடித்தது சட்டென…

“சரி… எழுந்திருங்க… மேலே படுங்க…” என்றவள், அவனை வற்புறுத்த, அவன் இதுக்குமேல தூக்கம் வராது என்றான்…

“சொல்லுறேன்ல… வாங்க…” என செல்லமாய் மிரட்டியவள், அவனை எழ வைத்து, பெட்டில் படுக்கவைத்துவிட்டு குளியலைறைக்குள் சென்றாள்…

அதன் பின் மங்களகரமான தோற்றத்துடன் அவன் முன் வந்து காபியை நீட்டினாள் அவள்…

அவன் எழுந்து கொள்ளாமல் இருக்கவே, அவனை நெருங்கி அவன் தோளில் கை வைத்த நொடி, அவன் சட்டென திரும்பி படுக்க, அவள் நிலை தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள்…

தன் மேல் ஸ்பரிசம் உணர்ந்து விழித்துக்கொண்டவன், வெகு அருகே தெரிந்த அவளின் முகத்தினைக் கண்டதும், அவனுக்குள் இனம் புரியா உணர்வு பிறந்தது…

லேசாக கலைந்திருந்த அவனது கேசம், அவனது நெற்றி, அவனது அடர்த்தியான மீசை அதற்கும் கீழ் லேசாக தெரிந்த அவனது அதரங்கள் அனைத்தும் அவளது கவனத்தில் பட, அவள் இதயக்கதவு அசைந்தது மெதுவாய்…

சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவள்,

“சாரிங்க…” என எழுந்து கொள்ள, அவனோ சிரித்தான்…

“வந்து நான் உங்களை எழுப்ப தான் வந்தேன்… ஆனா நீ திரும்பி படுத்ததும் தடுமாறி…. நா……..”

வேக வேகமாக திணறியவள், பின், “காபி குடிங்க… நான் கீழே போறேன்….” என பதட்டமும் நடையுமாக செல்ல, அவன் புன்னகை அவளையே தொடர, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்…

மனம் இனிப்பாக ஆனது போல், நாவும் இனிக்க, அந்த நாள் விடியல் அவனுக்கு ரம்யமாய் இருந்தது…

அந்த நாள் முழுவதும், அவன் நடந்து கொண்ட விதம், பேசிய விதம், பழகிய விதம், அவளிடம் காட்டிய பிரியம் அனைத்துமே அவளை அவனிடத்தில் ஈர்த்தது முழுமையாய்…

சில நாள் கழித்து, ஒருநாள் இரவு, மாமியாரும் மாமனாரும் பேசிக்கொண்டிருப்பதை எதேச்சையாக அவள் கேட்கும்படி நேர, அவளுக்கு சட்டென ஏனோ பயம் ஆட்கொண்டது நெஞ்சில்…

கலக்கத்தோடு நுழைந்தவளின் முகத்தினைக் கண்டு கொண்டவன் அவளிடம் என்ன ஏது என்று வினவ,

“நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல ஊருக்குப் போயிடுவீங்களா?... என்னைவிட்டுட்டு…. தனியா?....”

அவள் கேட்டதும், அவன் அதிர்ந்தான்…

“யாரு சொன்னா உனக்கு?... அப்படி?...”

“இல்ல கீழ அத்தையும், மாமாவும் பேசிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன்…”

“நான் ஊருக்குப் போகுறது உனக்குப் பிடிக்கலையா?....”

“இல்லை….”

“ஏன்?...”

“தெரியலை….. ஆனா போக வேண்டாம்… உங்க வேலை எனக்கு தெரியும்… ஆனா உடனே கிளம்ப வேண்டாமே… ப்ளீஸ்…”

“ம்ம்… ஏன்?....”

“எனக்கு உங்ககூடவே இருக்கணும் போல இருக்கு… ராஜா…….”

அவள் சொல்லிவிட்டு அவன் முகத்தினைப் பார்த்தாள்… அவன் எங்கே திட்டிடுவானோ என பயந்தவளாய் அவள் இருக்க, அவன் அவளை நெருங்கினான்…

“எனக்கும் அப்படித்தான் இருக்கு….. சகி….”

இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள, அவள் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள் யாதொரு தயக்கமும் இல்லாது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.