29. நீதான் என் சந்தோசம் - ராசு
சாந்தியும் சரவணனும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
வடிவு என்றுமில்லாமல் இன்று மிகவும் சந்தோசமாக இருந்தாள்.
உள்ளே நுழைந்த மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்.
ஆட்டோவில் வரும்போதே சரவணன் அவளிடம் பேசியிருந்தான்.
சாந்தி தான் வேலை பார்க்கும் இடத்தில் தனக்கு திருமணமாகப் போவதால் வேலையை விட்டு நின்று விடுவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாள் என்று விசயத்தை அவன் சொன்ன உடன் அவள் அகமகிழ்ந்துபோனாள்.
காலையில் வேலைக்கு கிளம்ப வேண்டாம் என்று சொல்லும்போது கூட அவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ியுமா? ஏதோ நல்ல இடத்தில் இருந்து அவ நல்ல மனசுக்கு சம்பந்தம் வந்திருக்கு. இல்லன்னா என்னாயிருக்கும்? இந்த குடும்பத்துக்காக தன்னைப் பற்றியே யோசிக்காமல் வாழறவ அவ? அவ இங்கேயே தங்கிப்போயிட்டா என்னாகும்? அன்னிக்கு சுயநலமா இவ முடிவு எடுத்ததுனால்தான இத்தனை கஷ்டம். அவ செஞ்சதுக்கு அவளே அனுபவிக்கட்டும்.”