அதைப் பார்த்து நேசமலர் ஆச்சர்யப்பட்டாள்.
“என்னக்கா? மஞ்சுக்கா திடீர்னு இப்படி சொல்லிட்டாங்களேன்னு உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கா?”
“எனக்கு அவளோட வெட்கத்தை பார்த்துதான் ஆச்சர்யமா இருக்கு. மத்தபடி இந்த கல்யாண விசயத்தை ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கிட்டுதான் இருந்தேன்.”
“மலர்!” ஆச்சர்யமானாள் மஞ்சரி.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாந்திக்கும் சரவணனுக்குமே இனிய அதிர்ச்சிதான்.
“சாந்தி! வா நாம போகலாம். மஞ்சுவே இன்னிக்குதான் மனசை திறந்திருக்கா. உன் அண்ணன்கிட்ட பேசட்டும். நாம போய் இந்த சந்தோசமான விசயத்தை உன் அம்மாகிட்ட பேசலாம்.”
அவர்கள் சென்றுவிட மஞ்சரி சரவணனுக்கு எதிரில் வந்து நின்றாள்.
“சாந்திக்காகதான் திடீர்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு. நீங்க ஒன்னுமே சொல்லலையே.”
...
This story is now available on Chillzee KiMo.
...
“உனக்கு இவங்களை முன்னாடியே தெரியுமா மலர்?”
“ம். தெரியுமே. நான் சொல்லிதான் வர்றாங்க. அம்மாவுக்கு கூட தெரியுமே.”
அவள் சொல்ல ‘நீதான் அந்த நல்லவளா?’ என்பது போல் அவளை முறைத்துப்பார்த்தாள்.
“சாந்தி. உன்னைப் பார்க்கிறதுக்காகதான் வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசு.” என்றாள்.