அவள் விழிகள் விரிந்தன.
இது எப்படி சாத்தியமாயிற்று. அவள் மனதுக்குள் பூட்டி வைத்த காதலுக்கு எப்படி உயிர் வந்தது?
“நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை சாந்தி. என் மேல் ஒருத்தி இவ்வளவு உயிரா இருப்பான்னு. என் தங்கையோட வாழ்க்கையைப் பார்த்த பிறகு எனக்கும் என்மேல் அன்பு செலுத்தற பொண்ணோடதான் வாழ்க்கை அமையனும்னு நினைச்சுப்பேன். ஆனால் காலத்தின் கட்டாயம் எனக்கு காதல் செய்ய நேரம் வரலை. என்னை இந்த உலகத்தில் நிலைநிறுத்திக்க போராட வேண்டியிருந்துச்சு. ஒரு நிலைக்கு வந்த பிறகு என் தங்கை குடும்பத்தோட மரணம் என்னை உலுக்கிருச்சு. அவ பிள்ளைங்க துன்பப்படும்போது என்னால் என் சந்தோசத்தை நினைச்சுப் பார்க்க முடியலை. ஆனால் நேசமலர்தான் இப்போதைக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் முக்கியம்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தி உன்னைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
் என் தங்கையோட வாழ்க்கையைப் பார்த்து ஆசைப்பட்டேன்தான். ஆனால் இப்ப எது மேலயும் விருப்பு இல்லை.”
“நீங்க என்ன ஆசைப்பட்டீங்க?”
“காதல் திருமணம் செய்ய வேண்டும்னுதான். எனக்காகவே அவ வாழனும்னுதான். ஆனா இப்ப காலம் கடந்து போச்சு. காதல் செய்ய மனசு இல்லை. இப்ப அதற்கான வயசும் எனக்கு இல்லை.”