வடிவு பேசுவது அத்தனையும் சரியே என்று வசந்தியின் மனம் ஏற்றுக்கொண்டது. அவளும் அப்படியே ஒதுங்கி அமர்ந்துவிட்டாள்.
சரவணனுக்குதான் அவளைப்பார்க்க பாவமாயிருந்தது. இப்போதைக்கு தாய் கோபத்திலிருக்கிறாள். அதனால்தான் இப்படிப் பேசுகிறாள். கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று விட்டுவிட்டான்.
அப்போது நேசமலர் உள்ளே நுழைந்தாள். பின்னேயே மஞ்சரியும் கண்ணம்மாவும் நுழைந்தனர்.
“வாங்க. வாங்க.” சரவணன் உற்சாகமுடன் வரவேற்றான்.
அவனுக்கு சென்று வர எளிதாக இருக்க வேண்டும் என்று நேசமலர் சொன்னதால் சக்கர நாற்காலி வாங்கியிருந்தான். இப்போது அதில்தான் அமர்ந்திருந்தான்.
“சாந்தி எங்கே?”
“அவ அறையில் தூங்கிக்கிட்டு இருக்கா.”
“என்னது? இன்னும் தூங்கறாளா? நாங்களே வந்துட்டோம். கல்யாணப்பொண்ணு சோம்பேறியா இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
்கொள்வேன்.”
ஒரு உறுதியுடன் கூறினாள்.
அதைக் கேட்ட கண்ணம்மா “ஏய்ய்ய்” என்று கத்தினாள்.
“மலரக்கா. மஞ்சுக்காவ பார்த்தீங்களா? உங்க தோழியோட திருமணத்திற்குன்னு வந்துட்டு சந்தடி சாக்கில் தன்னோட கல்யாணத்திற்கு அடி போடறாங்க.”
“பேசாம இருடி.”
மஞ்சரி வெட்கப்பட்டாள்.