(Reading time: 26 - 51 minutes)

ஜானகி, யோசனயுடம் இருக்கும் ஆதித்தை பார்த்து, என்ன அதித் யோசனையெல்லாம் பலமாக இருக்கு என்றாள்.

தன யோசனையில் இருந்து தாயின் கேள்வியில் இயல்புக்கு வந்தவன், பிசினஸ் பத்தித்தான்மா என்று வரவழைத்த புன்னகையுடன் பதில் கூறினான்

எப்பொழுதும் உனக்கு பிஸ்னஸ் பற்றித்தான் நினைப்பு. கொஞ்சம் எனக்கு மருமகள் கொண்டுவருவதை பற்றியும் யோசிக்கலாமில்ல ஆதித்.

எனக்கும் மருமகள் அப்பறம் பேரன், பேத்தி என கலகப்பான குடும்பமாக வாழவேண்டும் என்ற ஆசை கொஞ்சநாளாக அதிகரித்துக்கொண்டே போகிறது என்றாள்.

ம....நான் கூடிய சீக்கிரம் உங்க மருமகளை காண்பித்துடுவேன் என்றான் சிரித்தபடி .

அவனின் வார்த்தையில் சந்தோசமான ஜானகி, ,அப்போ! மருமகளை நீ செலக்ட் பண்ணிட்ட என்கிட்டதான் இன்னும் சொல்லாமல் மறச்சு வச்சிருக்க அப்படித்தானே ஆதித்! நீ யாரை காண்பித்தாலும் நான் மறுக்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கேனே பிறகு ஏம்பா என்னிடம் சொல்ல உனக்கு தயக்கம் எனக் கேட்டாள் ஜானகி.

தன அம்மாவின் வார்த்தையை கேட்டவன் மனதிற்குள், வார்சாகூட நான் லவ் பண்ண ஆரம்பித்தபிறகு இரண்டுபேரும் சந்தோசமா பேசிட்டு இருக்கறதவிட சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர் சமாதானப் படுத்தும் நாட்கள் தான் அதிகம் அவள் கூட நல்லபடி லவ் டிராக் ஓடும்போது சொல்லலாம் என்று நினைத்தால் ஒருவாரம் கூட தாக்குபிடிக்கமுடியலையே! ராட்சசி.... அழகு ராட்சசி... என்று மனதிற்குள் அவளை திட்டியபடி வெளியில் தன அம்மாவிடம் சிரித்தபடி

உங்களிடம் அவளை பற்றி சொல்லகூடாது என்று நினைக்கல ஆனா உங்ககிட்ட அவளை நான் அறிமுகம் செய்யும் போது எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து இருக்கனும் என நினைககிறேன் என்றான்.

ஜானகி அவன் கூறியதை பார்த்து, அழகுநிலாவுக்கும் ஆதித்துகும் ஊடல் என்று தான்நினைத்தது சரிதான் என் நினைத்தவள், சீக்கிரமே எல்லாம் சரியாகிடும் ஆதித் என்றாள்.

ங்கு அழகுநிலா தன அறைக்குள் போனதும் நல்லவேளை என் போனை பர்சுக்குள் போடவில்லை அவனுடன் பேசிக்கொண்டு இருந்ததால் அந்த போனில் கவருடன் இருந்த கைபிடியை தன கையில் மாட்டி வைத்திருந்ததால் தப்பித்தது என நினைத்தவள், தன்னுடைய மற்றொரு கையில் வைத்திருந்த ஐ போனை பார்த்து எப்படியாவது இதில் உள்ள என் வீடியோவை டெலிட் பண்ணனும். அந்த ராஸ்கல் திரும்ப என்னை காண்டாக்ட் பண்றதுக்குள்ள எப்படியாவது இதை டெலிட் செஞ்சுடனும் என நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவளின் அம்மாவிடம் இருந்து அவள் போனிற்கு அழைப்பு வந்தது அதை அட்டன் செய்து, எதிர்புறம் கேட்ட ராசாத்தியின் வசைமாலைக்கு இடையில் வார்த்தைகளால் புகுந்து அம்மா “மன்னிச்சுக்கோ” கத்தாத நான் ரூமிற்கு வந்ததுமே உனக்கு போன் பண்ணனும் தான் இருந்தேன். அதற்குள் மெஸ்ஸில் சாப்பிட கூப்பிடுவிட்டாங்க சுடசுட சாப்பிட நாக்கு கெஞ்சுச்சா.... அதனால் சாப்பிட போய்விட்டேன் என வாய்க்கு வந்தவாறு கதையடித்தாள்.

ரூமிற்கு வந்ததும் போன் செய்கிறேன் என்று சொன்ன மகள் அவள் எப்போதும் பேசும் நேரத்தை கடந்து போன் செய்யாததால் டென்சனுடன் போன் செய்த ராசாத்தி பின் அவள் சாப்பாட்டை பற்றி பேசவும் கோபம் போய் மகளின் வயிற்றுப்பாட்டை நினைத்து கவலை கொண்டாள் ராசாத்தி.

உனக்கு என்ன தலைஎழுத்தா அழகி? நீ வேலைக்கு போய்தான் சாப்பிடனும் என்று இருக்கா? வீட்டில் இருந்தா வாய்க்கு ருசியா நினச்சதை நினைத்த நேரத்தில் செய்து சாப்பிடலாம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டால் ராசாத்தி

ஏற்கனவே அழகுநிலா வேறு தேவையில்லாமல் வேலைக்கு வந்து வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டோமோ? என மருகிக்கொண்டு இருந்த நேரத்தில் ராசாத்தியும் இப்படி புலம்ப, உடனே, சரிமா... இப்போ உடனே வேலையை விடமுடியாது ஒருவருடம் அக்ரீமென்ட் முடிந்த உடனே நான் வேலையை விட்டுபுட்டு அங்கேயே வந்துடுறன், நீ புலம்பாத என கூறிவிட்டாள்.

ஏற்கனவே ராசாத்திக்கு தன மகள் போனில் தன்னிடம் பேசும்போது எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் இல்லாமல் பேசுவதை உணர்ந்துகொண்டிருந்தவள் அவளின் வேலையை விட்டுவிடுகிறேன் என்ற வார்த்தையை கேட்டதும், அங்கே தன் மகளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை யூகித்து, ஏன்டி அழகி! நீ..நல்லா இருக்கேயா உடம்புக்கு எதுவும் சுகமில்லையா? அல்லது வேலை பார்க்கிற இடத்தில் எதுவும் பிரச்சனையா? உன் குரலே சரியில்ல புள்ள. உண்மையை சொல்லிபுடு என விரட்ட ஆரம்பித்து விட்டாள்.

அச்சோ.... அம்மா! என் குரலை வச்சே கண்டுபுடுச்சுடுச்சே அதுபாட்டுக்கு அண்ணனை கூட்டிவர இங்க அனுப்பிடபோது. நான் மாட்டியிருகிற பிரச்சனையில் இருந்து வெளிவருகிறவரை இங்கிருந்து போக முடியாதே! என நினைதவள் குரலிலும் பழையபடி உற்சாகத்தை மெனக்கெட்டு கொண்டுவந்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.